இந்து என்னும் அடையாளம்
ஸ்ரீ ஸ்ரீ பற்றிய என் பதிவில் வந்த ஜடாயுவின் பின்னூட்டத்தில் ஸ்ரீ ஸ்ரீ எழுதிய Hindu Identity பற்றிய கட்டுரையை பதிவு செய்திருந்தார் .
ஸ்ரீ ஸ்ரீ சொன்னது ஒரளவு நிஜம் என்றாலும் ஹிந்து ஐடெண்டி இல்லாமல் இருப்பது ஒரு வகையில் முட்டாள்தனம் என்றும் , சாதி யை ஹிந்துக்கள் தன் ஐடெண்டியாக வைத்திருப்பதும் ஒரு வகையில் இதற்கு காரணம் என்றும் சொல்லி இருந்தார் . அவர் கருத்தை ஆமோதிக்காமலும் அதே சமயம் மறுக்கமாலும் எனக்குத் தோன்றிய சிந்தனைகள் .
ஐடெண்டி என்பது பல சமூக காரணங்களால் ஒரு சம்சாரிக்குத் தேவைப் படுகிறது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும் .சாமியாருக்களுக்கேத் தேவைப்படுகிறது சம்சாரி எம்மாத்திரம் .
சமூகத்தில் ஐடெண்டியோடு இருப்பதால் பல நன்மைகள் இருக்கிறது , எப்படியிருந்தாலும் நமக்கு ஒரு அடையாளம் தேவையானதாகவே இருக்கிறது , ஹிந்துவாகவோ , பிராமணர்களாகவோ , தலித்துவாகவோ, கம்யூனிஸ்டாகவாகவோ ஏதோ ஒரு அடையாளத்துடன் இருக்கவே பிரியப்படுகிறோம். அதில் சில நம் சமூக அமைப்பில் வளரும் பருவத்திலேயே சாதி ,சமயம் ,மொழி என்று திணிக்கப் படுகிறது . சில அடையாளங்களை நாமே நம் மேல் ஏற்றி வைத்துக் கொள்கிறோம் பெரியாரிச்ட்,கம்யூன்ஸ்ட்,லிபரல் ,வலதுசாரி போன்றப் பிரிவுகளை நாமே நம் சிந்தனையால் நம் மேல் ஏற்றி வைத்து கொள்ளும் அடையாளங்கள் .
சரியோத் தவறோ அடையாளங்கள் இல்லாமல் வாழ முடியாது நமக்கும் நம் இகோவிற்கும் தீனிப் போடும் அடையாளங்களை விட்டு விட்டுப் போவது என்பது சாதரணப் பட்டவர்களால் முடியாது என்பது உண்மையே .
அடையாளம் என்று வந்து விட்டால் அவரவற்குத் தேவையான அடையாளங்களுடன வாழ்வதை எப்படித் தவறென்றுச சொல்ல முடியும் .ஒரு அடையாளம் இன்னொரு அடையாளத்தை விட உயர்ந்ததா என்ன ?
பொதுவாக பெரும்பாலோனர் தம் அடையாளங்களை இடம் பொருளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள் . கிராமத்தில் நம் தெருவில் இன்னாரின் மகன் /மகள் மற்ற சாதித் தெருக்களில் இந்த சாதி பையன் (செட்டித்தெருப் பையன் /கோனாருப் பையன் )கொஞ்சம் வெளியே வ்ந்தால் கிராமப் பெயரே நம் அடையாளம . மற்ற மதக் காரர்களுக்கு -ஹிந்து நண்பர் ,முஸ்லீம் நண்பர் , மற்ற மொழிக்காரர்களுக்கு -தமிழ் நண்பர் ,தெலுங்கு நண்பர் வெளியே வந்து விட்டால் - இந்தியன் , அமெரிக்காவில் -தேசி / சவுத் ஏசியன் என்பது துணைக்கண்டத்தவரை குறிக்கும் சொல் (இந்திய/பாக்கிஸ்தான்/பங்களாதேஷ்/ஸ்ரீலங்கா )
புஷ் யை ஆதரித்தால் -வலது , ஒரின திருமணத்தை ஆதரித்தால் -இடது ,அல்ரா லிபரல் இப்படி வசதிக்காகத்தான் அவரவர்கள் தன் அடையாளங்களை வைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு ஹிந்துவிடம் ஹிந்து என்று அடையாளப்படாமலா இருக்கிறார். நமக்கே பேரைப் பார்த்தாலும் மற்ற அடையாளங்களிலும் ஹிந்து வென்று தெரிந்து விடுவதால் சாதி பற்றி யோசிக்க ஆரம்ப்பித்து விடுவார்கள் .
அதிலும் சிலர் பேரைக் கேட்டாலே சாதியை சொல்லிவிடுவார்கள், பேச்சை வைத்தும் சாதி கண்டுபிடித்து விடுவார்கள்.
சிவா ,சண்முகம் ,அவினாஷ் என்று யார் பேர் வைத்துக் கொள்கிறார்கள் ஹிந்துக்கள் தானே . தமிழ்செல்வியும் , புகழேந்தியும் கூட தமிழ் ஹிந்துக்கள் தான் வைத்திருப்பார்கள் .
பெரும்பால ஹிந்துக்கள் ஹிந்து அடையாளங்களோடு தானே வாழ்கிறார்கள் ,ஏதோ முஸ்லீம்கள் மட்டும் தான் மத அடையாளங்களோடு வாழ்கிறார்களா என்ன ? திரு நீறு, குங்குமம்,சந்தனக் குறி ,பூணூல் போன்றவை ஹிந்து அடையாளங்கள் இல்லையா என்ன ?
ஹிந்து அடையாளம் இல்லாத எதாவது இடத்தை இந்தியாவில் காட்டுங்கள் . இதை தவிர ஹிந்துக்கள் என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறார் ஸ்ரீ ஸ்ரீ என்றுத் தெரியவில்லை .
ஸ்ரீ ஸ்ரீ சொன்ன மாதிரி சாதி ,மூட நம்ப்பிக்கைகளும் தானே ஒரு சாதாரண ஹிந்துவுக்கு அடையாளங்களாக இருக்கிறது. எந்த ஹிந்து பிரயாணமத்தையும் தியானத்தையும் பார்த்தான் .
வேண்டுமானால் இப்படிச் சொல்லாம் ஹிந்து என்ற அடையாளத்தை உரக்கச் சொல்ல இந்திய படித்த ஹிந்துக்க்கள் கூச்சப் படுகிறார்களாக இருக்கலாம் ? இந்து என்பவன் ,தான் ஒரு இந்து என்பதிற்கு பதில் மொழியாலும் , சாதியாலும் பிளவு பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார் போலும் .
மொழியாலும் ,சாதியாலும் பிளவு பட்டுக் கிடப்பது தவறு தான்,ஆனால் ஹிந்து என்று சொல்வதாலும் தான் பிளவு ஏற்படும். அடையாளம் தேவை என்றால் அவரவர்க்கு தேவையான அடையாளங்களைத் தான் தேர்ந்து எடுப்பர் . அதை தவறு இந்த அடையாளம் தான் உனக்கு சரி எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை .
தமிழன்,கன்னடன் எண்று சொல்லாதே இந்தியன் என்ரு சொல் என்று வற்புறுத்துவது கூட ஒரு வகையில் வன்முறை தான் .அது போலத் தான் நீ இந்து என்று சொல் என்று வற்புறுத்துவதும் ஒரு வகையில் வன்முறை தான் .
மேலும் இங்கு ஒன்றும் இந்துக்கள் invisible ஆக ஒன்றும் இல்லை உரக்கச் சொல்வதற்கு , சொன்னாலும் சொல்லா விட்டாலும் இந்து என்பவன் அவன் அடையாளங்களோடு தான் வாழ்கிறான் ,கடவுள் இல்லை என்று சொல்லுகிற கருணாநிதி வீட்டில் கூட இந்து அடையாளங்கள் தான் .நம் சமூகத்தில் கம்யூனிஸ்டுகள் கூட மத அடையாளம் இல்லாமல் இருந்ததில்லை உதாரணம் சுர்ஜித் சிங் , இதில் யாரைப் போய் குறை சொல்ல .
சுயம் அழித்தலே உண்மையில் ஆன்மீகத்தின் உச்சம் என்று திரும்ப திரும்ப நம் இந்திய தரிசனங்க்கள் உணர்த்தினாலும் சுயம் அழித்தல் ஒன்றும் சுலபமல்ல ,சம்சாரிக்கு மட்டுமல்ல இங்கு ஞானிகளாக காட்டப் படுபவர்களுக்கும் கூட .