கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

வாழ்க கன்னட பிரசாத்

வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் பாலியல் தொழில் சார்ந்த பெண்களை சார்ந்தவர்களை பற்றிய குறிப்புகள் இல்லாமல் ஒன்றையும் பார்க்க முடியாது.அதிகாரத்திற்கும் பணத்திற்கும் உடல் சுகம் கொடுக்கும் பெண்கள் இல்லாத உலகம் சாத்தியமில்லை என்பதை வரலாறு திரும்ப திரும்ப காட்டுகிறது .
ஆயினும் இத் தொழிலை பெரும்பான்மை யான நாடுகளில்பாலியல் தொழில் சட்ட விரோதமானதாகவே வைத்துள்ளது . இந்தியாவில் சட்ட விரோதமானது என்றாலும் பாம்பே ரெட் லைட் ஏரியாவில் கண்டு கொள்ள மாட்டார்கள் . எல்லா இடங்களிலும் பெரு நகரம் ,சிறு நகரங்களில் அதிகாரத்திலுள்ளவர்களின் தொடர்பு வைத்திருப்பவர்கள் போலிஸ் துணையுடனும் , சில சமயம் மறைவாகவும் அமோகமா தொழில் நடந்து கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் மாட்டிய கன்னட பிரசாத் என்னும் உயர் தர தொழில் தரகன் மாட்டியது பல கிளு கிளுப்பானத் தொடர்களை பத்திரிகை ஊடகங்கள் ஆரம்ப்பிக்க உதவியாகவும், நாம் அவர்களின் கிசு கிசு பாணியிலான நடிகைகளின் தொடர்புகளை படித்து நம்முடைய அறிவு கூர்மையைத் தீட்டிக் கொள்ளஉதவியதற்கு போலிஸாருக்கு நன்றி கூறவே வேண்டும்.

கன்னட பிரசாத் பெரும் தொழில் அதிபர்களுக்கும் பெரும் பண முதலைகளுக்கும் பத்திரிகைப் பாஷையில் அழகிகளையும் நடிகைகளையும் கொடுத்து வந்தான் என்பதே பெரும் குற்றச்சாட்டு. இதை ஒரு கார்ப்பரேட் அளவுக்கு பண்ணி வந்தானாம் ,சென்னை விபச்சார போலிஸ் காலம் காலமாக இவனுக்கு சேவகம் செய்து வந்தார்களாம் . நியாயமாய் பார்த்தால் இந்த அதிகாரத்தில் இருக்கும் நபர்களின் போட்டாக்கள் தான் முதல் பக்கத்தில்வர வேண்டும் ,ஆனால் பிடி பட்ட துணை நடிகைகளின் போட்டாக்களை தந்து விட்டு சாதித்த பெருமையுடன்பேட்டி கொடுக்கும் போலிஸ் காரர்களைப் பார்த்தால் எரிச்சலே வரும் .

உடலை விற்கும் எந்த ஒரு பெண்ணிற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் ? நேர்மையாகப் பார்த்தால் பாலியல் தொழிலாளர்கள் எவ்வுளவோ மேல் . காசு வாங்கியதற்கு அவர்கள் வேலையை யாவதுசெய்கிறார்கள் , இவர்கள் கடமையை விட்டு விட்டு மாமா வேலை பார்க்கும் இவர்களே கேவலமானவர்கள்.

இந்த விவகாரத்தில் இதை இவ்வுளவு பெரிய விசயமாக ஆக்கியிருக்கவே வேண்டாம் ,யாரோ பணம் நிறைய உள்ள முதலைகள் செய்து கொள்ளும் அசிங்கம் நமக்குத் கிசு கிசு பாணியில் தெரிந்ததில் சமூகத்திற்கு என்ன நன்மை. அப்படியே பெரிய மனிதர்களின் முகமூடிகளை கிழிக்க வேண்டும் எனில் தெளிவாகவே ஒரு அறிக்கை போலிஸால் குடுத்திருக்கப் பட வேண்டும் . அது முடியாது இவ்வுளவு நாள் படியளந்த படியளந்து கொண்டிருக்கும் முதலாளிகளின் பெயர்களை எப்படிச் சொல்ல முடியும், அதற்கு ஆண்மையும் முதுகெலும்பும் உள்ள போலிஸும் ஆட்சியாளர்களும் வேண்டும்.

மீசையும் , எளியவனிடம் வீரம் காட்டுவதும் ஆண்மையில்லை . சட்டம் கடமையை செய்யும் என்ற கேலிக் கூத்தை கேட்பதற்கே எரிச்சலாக வருகிறது.
விபச்சாரத்திற்காக கைது செய்யப்பட்டு டிவிக்களிலும் பத்திரிகைகளிலும் போட்டோ போடப்பட்ட எந்த நடிகை தண்டிக்கப் பட்டார்கள் ? கோர்டில் தகுந்த ஆதாரம் இல்லாததால் விடிவிக்கவேப் பட்டனர். சரி அப்படி அவர்கள் குற்றம் செய்யாதவராக இருந்தால் அவர் அசிங்கப் படுத்தப்பட்டதற்கு அதனைச் செய்த அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் என்ன தண்டனை ? அவர்களை தவறாக கேஸ் போட்டதற்காக கோர்டுகள் தண்டிக்க வேண்டும் , ஆனால் கோர்டுகளே ஏதாவது லூஸுக்கள் ஸ்ரீ தேவி என் பொண்டாட்டின்னு கேஸ் போட்டால் சம்மன் கொடுத்து அப்படியாவது நடிகைகள் நம்ம கோர்ட்டுக்கு வந்து நாமளும் பேப்பரில் வரமாட்டோமா என்று ஏங்கி நிற்கும் நீதி தேவதைகள் தான் நம் நீதிக் கூடங்களில் இருக்கிறார்கள் என்னும் போது என்ன சொல்ல ?

Any way , கிளு கிளு கதையை ஜுவியில் கொஞ்ச நாள் படிக்கலாம் ,வாழ்க கன்னட பிரசாத் .

Labels: ,

7 Comments:

At March 02, 2007 5:05 AM , Anonymous Anonymous said...

//சென்னை விபச்சார போலிஸ் காலம் காலமாக இவனுக்கு சேவகம் செய்து வந்தார்களாம் . நியாயமாய் பார்த்தால் இந்த அதிகாரத்தில் இருக்கும் நபர்களின் போட்டாக்கள் தான் முதல் பக்கத்தில்வர வேண்டும் ,ஆனால் பிடி பட்ட துணை நடிகைகளின் போட்டாக்களை தந்து விட்டு சாதித்த பெருமையுடன்பேட்டி கொடுக்கும் போலிஸ் காரர்களைப் பார்த்தால் எரிச்சலே வரும் .//

ஊடகங்களிலிருந்து அரசு/அதிகாரிகள் வரை செய்யும் இந்தச் செயல்தான் உண்மையான விபச்சாரம்.

அதென்ன சொன்னீங்க? முகெலும்பா??

ஹி ஹி

 

At March 02, 2007 9:52 AM , Anonymous Anonymous said...

பிடிபட்ட பிறகு முகவரி தெரிஞ்சு என்ன பண்ணபோறம்?
எதுக்கும் முகவரி தெரிஞ்சா சொல்லப்பா.
பிரசாத் வெளியே வந்தா நாலு அதிகாரிக்ளுக்காவது பயன்படட்டுமே..

புள்ளிராஜா

 

At March 03, 2007 3:35 AM , Anonymous Anonymous said...

என்ன பண்றது.. கல் தோன்றா முன் தோன்றிய மூத்த தொழில் அல்லவா இது? அதனால் இத அழிக்க முடியுங்கிறது சாத்தியமில்ல தான்.

அதே சமயத்தில டைரியில் உள்ள நபர்கள் யாரு? போலிஸ் அதிகாரிகளோட பேரு என்ன, இதெல்லாம் சொல்லவே மாட்டாங்களே.

ஜூனியர் விகடன்ல தொடரா வருது. இரகசியக் குறிப்புகள் எல்லாம் கொடுக்குறாங்க. யாராவது சம்பந்தப்பட்டவங்கள அரஸ்ட் பண்ண முடியுமா. அதுக்கு சான்ஸே இல்லை. கேட்டா ஆதாரம் இல்லை.

இன்னும் சட்ட ஓட்டைகள் ஏராளம்.

இது பத்திரிக்கைகளுக்குத்தான் தீனி. சர்குலேஷன் எகிறும். கொஞ்ச நாளைக்கு ஆபாசக் கதைகள் செய்தி என்ற பெயரில் அபிஷியலாக பேப்பரில் வரும்.

 

At March 03, 2007 6:02 AM , Blogger Sirajudeen said...

any way, கிளு கிளு கதையை ஜுவியில் கொஞ்ச நாள் படிக்கலாம்இ வாழ்க கன்னட பிரசாத் .

அழகான கேள்விகளை கேட்டு, அழகிய பதிவை போட்டு விட்டு கடைசியாக இந்த வார்த்தையை சேர்த்து விட்டீர். இப்போது தான் போலிஸ{க்கும், விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விட்டீர்கள். மனிதர்கள் எப்போது தங்கள் மனஇச்சையை பின்பற்றுகிறார்களோ அதுவரை வழிகேட்டில் தான் செல்வார்கள்.

 

At March 03, 2007 8:18 PM , Blogger கூத்தாடி said...

பொறுக்கி அவர்களே
முதுகெலும்பு தான் :-(

 

At March 03, 2007 8:21 PM , Blogger கூத்தாடி said...

புள்ளிராஜா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அனானி

//இது பத்திரிக்கைகளுக்குத்தான் தீனி. சர்குலேஷன் எகிறும். கொஞ்ச நாளைக்கு ஆபாசக் கதைகள் செய்தி என்ற பெயரில் அபிஷியலாக பேப்பரில் வரும். //

உண்மை அதைத் தான் சொல்ல வந்தேன்.

 

At March 03, 2007 8:25 PM , Blogger கூத்தாடி said...

//any way, கிளு கிளு கதையை ஜுவியில் கொஞ்ச நாள் படிக்கலாம்இ வாழ்க கன்னட பிரசாத் .

அழகான கேள்விகளை கேட்டு, அழகிய பதிவை போட்டு விட்டு கடைசியாக இந்த வார்த்தையை சேர்த்து விட்டீர். இப்போது தான் போலிஸ{க்கும், விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விட்டீர்கள். மனிதர்கள் எப்போது தங்கள் மனஇச்சையை பின்பற்றுகிறார்களோ அதுவரை வழிகேட்டில் தான் செல்வார்கள்.
//

நான் என்ன சொல்ல வந்தேன் என்று நீங்கள் புரிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் ..ஜூவியில் எழுதுவது எனக்கு ஒப்புமை இல்லாத விசயம் அதைச் சொல்லத் தான் எரிச்சலில் அந்த கடைசி வரியை சேர்த்தேன் ..படித்தவர்கள் புரிந்து கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கையில் ..

ஆனாலும் மன இச்சை பற்றி சில சிந்தனைகளை உங்களின் பதில் தூண்டி விட்டது அதற்கு நன்றி

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home