கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

நன்றி

நான் ஸ்டாராகி எழுதத் தொடங்கு முன் பெரிதாக எந்த ஐடியாவும் கைவசம் இல்லை என்ற போதிலும் எப்படியோ இது வரை எழுதி விட்டேன் ,அழுதும் போது பல சிந்தனைகளைத் தூண்டி பல தலைப்புகளை குறித்து வைத்தேன் ஆனால் நேரம் இன்மையால் எழுத முடிய வில்லை.

இந்த வாரம் நான் வேலை பார்க்கும் வேலையில் இருந்து மாறுகிறதால் இந்த வாரம் தான்
கடைசி வாரம் .பல வேலைகளிலும் பேர் வெல் லஞ்சுகளலாலும் ,டின்னர் தண்ணி பார்டிகளாலும்
அவ்வுளவாக எழுத முடியவில்லை .அதற்காக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் எழுத நினைத்த தலைப்புகளில் ஒன்று ,தாய் வழி சமூகமும் நாயர் தறவாடும் .இதை பற்றி யாராவது தெரிந்தால் எழுதலாம் .நானும் எழுத முயற்சிக்கிறேன் .நான் கிற்க்கிய கவிதைகளில் ஒன்றையும் சந்தடி சாக்கில் உள்ளே நுழைத்து விட்டேன் ,கவிதை எழுதுவதில் பயிற்சியின் முக்கியத்தை ஒவ்வொரு நல்லக் கவிதையை படிக்கும் போது உணர்வேன் . வாழ்க்கையில் ஒரு நல்ல கவிதையை எழுத ஆசை உண்டு ,அதை விட கவிதை போல்
வாழ்க்கை அமைய ஆசையும் உண்டு.பார்ப்போம்.

நான் வேலை பார்க்கும் Networking/Security field பற்றி எழுதலாம் என்று இருந்தேன் ,முடியவில்லை.எவ்வுளவு பேருக்கு ஆர்வம் இருக்கும் என்று தெரியவில்லை . மட்டுமல்லாமல் டீச்சர் போல் எழுதுவது கடினம் நான் ஒரு மோசமான ஆசிரியர் வேறு, இன்னொன்று பொழுது போக்கான still photography மற்றும் Nikon கேமரா பற்றி ,அதுவும் முடியவில்லை.எல்லாமே சீரியசான பதிவுகளாகி விட்டது .

Google Analystics இன் படி எழுதியப் பதிவுகளில் அதிகமாய் படிக்கப் பட்டது அமெரிக்காவின் அடிவருடியும் ,கன்னட பிரசாத் ,இந்து என்னும் அடையாளம் போன்ற பதிவுகள் . நான் நன்றாக வந்திருப்பதாய் கருதியது தேடலைப் பற்றியப் பதிவும் ,இழப்பின் வலிக்கான மருந்தும் தான் .உங்களின் கருத்து என்ன

எனக்கு பின்னூட்டம் இட்டு நம்பிக்கை ஊட்டிய வஜ்ரா,தமிழ் நதி, சிவா,மாசிலா,நிர்மல்,உஷா,துளசி,பொன்ஸ் ,முத்துக் குமரன்,அப்துல் குத்தூஸ்,சின்னக் குட்டி ,திரு,தருமி,வடுவூர் குமார்,மதுரா,கார்த்திக் பிரபு,கிஷோர்,எழில் ,ஜிராஜுதீன்,அரவிந்தன் நீலகண்டன்,இந்து,டெஸ்ட்,பொறுக்கி,குறும்பன், சீனு மற்றும் அனானியாக வந்து கருத்து சொன்னவர்களுக்கும் என் நன்றி.


It Does n't Matter whether your Loving is Spritual or Sensual
what Matters is that it leads you to LOVE itself
-Mavlana Jalal Al-Din Rumi

தேடலின் இயல்பு -2

போனப் பதிவில் எனக்குப் பிடித்த சில ஆன்மீகப் பெருசுகளைப் பற்றி சொல்லியிருந்தேன் .அதில் ஸ்ரீ ஸ்ரீ பற்றி எழுதாதது ஏன் என்று ஒருவர் கேடிருந்தார்.அவரைப் பற்றி ஏற்கனவே விமர்சித்திருந்தாலும்
எனக்கு அவரின் சுதர்சன் கிர்யாபற்றி நல்ல அபிப்ராயமே உண்டு .அனுபவப் பட்டவர்கள் பலர் அதனைப் பற்றி நல்லதாகவே சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அவர் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் அதற்காக அவர் சொல்லிக் கொடுக்கும் ஒரு நல்ல விசயத்தை மறுக்கக் கூடாது , நஷ்டம் அவருக்கல்ல நமக்குத்தான் .அவரின் கிரியா கோர்ஸ்யில் சேர வேண்டும் என எண்ணிக் கொண்டு இருக்கிறேன் .கண்டிப்பாய் இந்த வருடம் கற்றுக் கொள்வேன்.

இவர்களைத் தவிர எனக்குப் பிடித்தவர்களின் முக்கியமானவர்கள் ஓஷோ ,ஜேகே மற்றும் ரூமி .இவர்களை எழுத்தின் வழியாக மட்டுமே தெரிந்தாலும் இவர்களின் ஆளுமை அலாதியானது .

ஜேகே யின் பலப் புத்தகங்கள் படித்து இருக்கிறேன் ,பல சமயம் திரும்ப திரும்ப படித்து தான் சில விசயங்களை புரிந்து கொண்டு இருக்கிறேன் .ஜே கே பற்றி நான் எழுதிஒன்றும் தெரிய அவசியமில்லை .தீவிரமானத் தேடலின் ஒரு ஆரம்பம் ஜே கே வாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள்அதிகம்.

ஓஷோ வைப் பற்றி செக்ஸ் சாமியாராகத் தான் நம் "மதிப்பிற்குரிய" பத்திரிகைகள் அறிமுகப் படுத்தின.ஆனால்அவரைப் பற்றியப் புரிதல்கள் அவரைப் படித்தபின் வந்தது .அவர் ஒரு விதத்தில் தவறாக அறியப்பட்ட அருமையானஆன்மீகத் தலைவர்.அவர் எந்த விசயத்தைப் பற்றியும் பேசத் தவறியதே இல்லை ,ஒரு முறை "Fuck " வார்த்தையை வைத்து ஒரு அருமையான உரையை தந்து இருப்பார் .you tube இல் இருக்கிறது
http://www.youtube.com/watch?v=6D7rWLzloOI

பாருங்கள்.இவர் இது போலப் பேசியதில் பல பேர் இவரை திட்டிக் கொண்டு இருக்கிறார்கள் .மேலும் அவர் பேரில்உள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நான் அறிவேன் .அவர் ஒரொகனில் ஆசிரமத்தில் நடநதப் பிரச்சினைகளையும்இயந்திர துப்பாக்கி பாதுகாப்பில் ஒரு பெரிய கல்டுகளின் நடுவே அவர் இருந்த நாட்களையும் .ஊர் ஊராக துரத்தி அடிக்கப் பட்டு இந்தியாவில் புனேயில் அரசாங்க கட்டுப் பாடுகளில் அவர் இருக்க நேர்ந்தமைக்கானக் காரணம் அவரிடம்காணப்பட்ட அதீத கிண்டல் கூடக் காரணமாயிருக்கலாம் .அவர் ஒரு வழக்கமான இந்தியச் சாமியார் இல்லை.

எனக்குப் பிடித்தது அவரின் அருமையானச் சொற்பொழிவுகள் .அவரின் பகவத் கீதைக்கான உரையும் ,பதஞ்சலி யோகசூத்திரத்தின் உரையை அவர் பாணியில் வெறும் மொழிபெயர்ப்பை போல் அல்லாமல் அவரின் கருத்தை வைத்திருப்பார்.ஒரு விதத்தில் கீதையை அவரைப் போல் தான் அணுக வேண்டும் .

அவரைப் பற்றி வரும் பல அவதூறுகளைப் படிக்கும் போது எதிர் வினை ஆற்றத் தோன்றும் ஆனால் செய்வதில்லைஎதிர் வின ஆற்றுவது முட்டாள்தனமானதும் கூட .புரிந்து கொள்ளாதவர்கள் எதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள் அது மட்டுமில்லை ஒஷோ வின் புகழ் பாடுவது அல்ல என் நோக்கம் அவர் சொல்வதை புரிந்து கொள்வதுமட்டுமே .

என்னுடைய நண்பர் ஒருவரால் அறிமுகப் படுத்தப் பட்ட இன்னொரு சூபி ஜலாவுதீன் ரூமி.

Lovers have a religion all of their own Their only creed is Love

என்று எழுதிய கவி அவர் .பால்க் ,ஆப்கானிஸ்தானில் பிறந்தவர் டமாக்கஸ் ,பெர்சிய பகுதிகளில் சூபி யிசத்தைபற்றி கற்பித்து ஆன்மீக ஆசானைத் திகழ்நத 1207-1273 வரை வாழ்ந்து இன்றும் தன் கவிதைகளால் வாழ்கிறவர்.இவரைப் பற்றிய அறிதல் இன்னும் ஒரு முறை மதங்கள் என்னும் மடமையில் இருந்து கடந்து வருவதற்கான காரணங்களை உறுதி செய்தது .ஆங்கிலம் மூலமாகத் தான் இன்னமும் படித்து வருகிறேன் , தமிழில் யாராவதுஇவரைப் பற்றி எழுதியிருந்தால் எனக்குச் சொல்லவும் படிக்க ஆவலாய் இருக்கிறேன். இவரைத் தொடர்ந்து பல இஸ்லாமிய சூபிக்கள் பற்றி படித்து வந்திருக்கிறேன் .ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு கவிதை ,அவர்களின்ஆன்மீக பலம் வியக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் .யாராவது இஸ்லாமிய நண்பர்கள் இவர்களைப்பற்றி தொடர் எழுதலாம் ,சூபி அல்லது ரசூல் எழுதினால் சந்தோசப் படுவேன்.நாகூர் ரூமி திராட்சைகளின்இதயம் என்று ஒரு சூபிக் கதை எழுதியிருந்தார் ,அவர் ஜலாவுதீன் ரூமி பற்றி எங்கோ கூறியதை படித்ததாய்ஞாபகம் .அவர் ரூமியைப் பற்றி எழுதலாம் .

எனக்கேவான ஒரு ரூமியின் கவிதை

Wisdom repeated like a Parrot
flies away when most need it

I am telling you Mr Clever - Clever
even if you write it down in your liitle book
and brag about how well read you are
it will escape from this cage
Forget about what other people have said
just show Wisdom some love and affectionand
she will becaome a pet Bird
whose perch is your open Palm

இன்னொன்று

When you say to a thirsty man,
Over here ! there's water in this cup
does the thirsty man reply
that is only your opinion
where is the evidence to subsataniate
your assertionthat this is an aqueous liquid ?

மஜ்னபிக்கு என் வணக்கத்தோடு இன்னமும் நான் இவர்களைப் பற்றி சரியானப் புரிதல்களோடு எழுதுவேன்என்ற நம்பிக்கையோடு

Allah Says,

"You can't carm me in to a Jar.
Heaven and Earthare too cramped to contain me
I live only on the Loving expanses of a lover's heart
Look for me there "

அன்பின் வழியாக அல்லாவையோ சிவனையோத் தேடி ......

கருப்பும் சிவப்பும்

நிறம் ஒருவரின் உடலின் உள்ள பிக்மெண்ட் மெலினின் தன்மையை பொறுத்தே ஒருவரின் சருமத்தின் நிறம் அமையும் .ஆனால் நம் சமூக அமைப்பில் நிறத்திற்கான மதிப்பு எவ்வுளவு என்பதை மேட்ரி மோனியல் பக்கங்களை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம் .அழகு என்பது சருமத்தில் தேடுகீற சமூகக் கூட்டம் நாம் .இது உலக அளாவில் இருக்கின்ற ஒன்று என்ற போதிலும் நம் ஊரில் பாதிப்பு கொஞ்சம் அதிகம் . படிக்காத பாமரர்கள் இப்படி இருப்பார்கள் என்று சொல்லி விட முடிவதில்லை .பெரும்பாலும் படித்த மக்களின் மோகம் தான் அதிகம் .

எனக்குத் தெரிந்து எத்தனையோப் பேர் கலர் கம்மி என்று சொல்லியே எத்தனை பெண்களையோ பலர் கல்யாணம் பண்ண மறுத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலும் சமூக நிலையிலும் ,படிப்பிலும் சிறந்தவர்களா இருப்புதைக் கண்டு தான் எனக்குக் கோபம் ,அதிலும் பெரும் பாலோனவர்கள் கருப்பு நிறம் தான் .ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் கலரானப் பொண்ணு வேண்டும் , பிள்ளைகளாவது நிறமாய் வரட்டுமே என்றுச் சப்பைக் கெட்டு வேறு. நிறமானப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி அப்பாவின் நிறத்தைக் கொண்டு பிள்ளைகள் பிற்ந்த பின் எந்த கலராய் இருந்தால் என்ன என்று சமாதானம் சொல்லிக் கொள்கின்றவர்களைப் பார்க்கும் போது சிரிப்பு வரும்.

அவர்களைப் பார்த்துச் சிரித்தாலும் ,அவர்களின் தாக்கம் எனக்குப் புரியவே செய்தது .முதலில் நம் சமூகம் நிறக் குறைவானவர்களுக்கு கொடுக்கும் மரியாதைக் குறைவு தான் ,அதனால் வரும் தாழ்வு மனப் பான்மை தங்கள் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்று எண்ணுபவர் பலர் ,அதில் ஒன்றும் தப்பில்லை.ஆனால் கருப்பாய் இருப்பது அவமானமாய் இருக்கிறது என்றால் ,நீங்கள் ஏன் இன்னொரு கருப்புக் குழந்தையை உருவாக்கவேண்டும் .சிவப்பு நிறப் பெண்ணைத் திருமணம் செய்தாலும் கருப்பானப் பிள்ளைப் பிறக்க சாத்தியக் கூறுகள்இருக்கிறதே .

சிவப்பு நிறம் மேல் நமக்கு இருக்கும் மோகம் அலாதியானது ,சிவப்பு அழகு கீரிம்கள் நம்ம ஊரில் பட்டி தொட்டி வரை 15 வருசத்துக்கு முன்னே கிடைக்கும் .சிவப்பு நிறம் இல்லாத எந்த நடிகைகளை நாம் கொண்டாடி இருக்கோம் .கருப்பாய் இருப்பவர்கள் அதிகம் இருக்கும் தமிழ் தெலுங்கு மாநிலங்களிலே தான் சிவப்புத் தோலுக்கான மதிப்புஅதிகம் .ராஜிவ் காந்தியை 89இல் பிரச்சாரத்தில் பார்த்து விட்டு எங்கள் ஊரில் வியந்தது இரண்டு விசயத்துக்குத் தான்இன்னமா கலரு ,இன்னொண்ணு அவரே ஜீப் ஓட்டிடு வந்தாரே ..பிளேட்டெல்லாம் ஓட்டுறாராம் .அன்றைக்குஉணர்ந்தேன் ஏன் கவர்ச்சி அரசியல் தமிழ் நாட்டில் ஏன் செல்லுபடியாகிரது என்று.

இந்த நிறம் சம்பந்தமான மனத் தடையை கருப்பாக இருக்கும் நாமே உடைக்காவிட்டால்,எப்படி சமூகம் மாறும் .பிள்ளைகளுக்குப் பெண் தேடும் பெற்றோர் பலர் இந்த சிவப்பு மாயையில் இருந்தாலும் ,அவர்களை விட மயக்கமாய் இருப்பது மாப்பிளைகள் என்பது தான் வருத்தம் .இதில் நன்கு படித்து வேலையில் இருப்பவர்களும் அமெரிக்காவில்இருக்கும் ரேசிசம் பற்றி பேசும் அறிவு ஜீவிகளும் இந்த வரிசையில் முதலாவதாய் இருக்கும் போது தான் எனக்கு அதிகமாய் எரிச்சல் வரும்.

நம் உள் இருக்கும் ஜீன் அவ்வுளவு சிம்பிள் கால் குலேசனில் மாற்ற முடியுமா என்ன .மாற்ற வேண்டுமானால் உங்கள் மூதாதையரைத் தான் மாற்ற வேண்டும் .முதலில் உங்கள் தாழ்வு மனப் பான்மையை விடுங்கள் ,உங்கள் குழந்தைகள் கருப்பானாலும் சிவப்பானாலும் நன்றாகவே வளரும்.

அடிமையும் மதமும்

போன நூற்றாண்டில் முக்கியமான சீர்திருத்தமாக நான் கருதுவது அடிமை முறை பற்றி வந்த விழிப்புணர்வு. உலகெங்கும் வெவ்வேறு பெயர்களில் மதங்களில் சொல்லப்பட்டும் செயல் பட்டும் வந்த அடிமைமுறை 19ம் நூற்றாண்டிலும் 20 வம் நூற்றாண்டிலும் மனிதனுக்கு மனிதன் அடிமை என்ற அசிங்கத்தை ஒவ்வொருவராக உணர்ந்து திருத்த முயற்சித்தனர், அதன் விளைவாய் இரண்டாம் உலகப் போருக்குப்பின் அனேக நாடுகளில் அடிமை முறை சட்ட விரோதமானது . ஒரு வகையில் எல்லா முன்னேற்றங்களை விட முக்கியமானது தான்.

இது எதனால் ஏற்பட்டது என்பதற்கு பல சமூகக் காரணங்கள் , முதலாவதாக ஐரோப்பாவில் நடந்த தொழிற் புரட்சியின் விளைவால் நடந்த சுபிட்சங்களும் ,அதன் விளைவால் மக்களின் வாழ்க்கை முறை மாறியதும் அவர்களை சிந்திக்க தூண்டியதும் காரணமாய் இருக்கலாம்.அடிமை slavery என்றாலே எதோ வெள்ளைக் காரர்கள் கறுப்பின மக்களை கொடுமைப் படுத்தியகதயை மட்டும் யோசித்து உச் கொட்டி விட்டு அவங்க எல்லாம் அப்படித்தான் நம்ம நாட்டில்இல்லை என்பது போன்ற ஒரு வாதம் இங்குள்ள NRI நண்பரகளுக்கு இருக்கிறது.ரேசிசம் பற்றிப் பேசி பெரிதாய் வெள்ளைக் காரனை குற்றம் சாட்டுவார்கள் . என் கேள்வி அவர்கள் மட்டுமா எனபது தான் ?

அடிமை முறை என்பது எல்லா ஊரிலும் இருந்த ஒரு அழுக்கு,அது இயற்கை என்பதை "வல்லான் வகுத்ததே சட்டம் " என நினைக்கும் ஒரு சமூகக் கூட்டம் அங்கீகரிக்கக் கூடும் .பழையக் காலக் கட்டங்களில்நடந்த பல விசங்கள் இன்று முட்டாள் தனமாயும் அசிங்கமாயும் பார்க்கப் படுவது இயல்புதான்.ஆனால்இதைப் பற்றிப் பேசும் பொழுது நண்பர்கள் அது அந்தக் காலக்கட்டத்திற்கு சரி என்பது போல் வாதிடுவார்கள் .வாதத்திற்கு அப்படி வைத்துக் கொண்டால் அதே லாஜிக்கில் பழைய நம் சரித்திரம் கூட அப்படித்தான் இன்றைக்கு அது பற்றி உயர்வாய் சொல்லுவதும் பழம் பெருமை பேசுவதும்குற்றம் தான் .அதன்படி நம் பல பழக்க வழக்கங்கள் இன்றைக்கு குப்பைத் தொட்டியில் போட வேண்டியதுஅதை இன்னமும் தூக்கிப் பிடுத்து கொண்டு இருக்கிறோம்.கலாச்சாரம் என்பது பழையதை தொடர்ந்து பண்ணி வருவது என்று எண்ணும் பலர் நம்மிடையே உள்ளனர். பெண்கள் புடைவை கட்டுவது தமிழ் கலாச்சாரம் ஜீன்ஸ் போட்டால் கெட்டு விட்டது போல் பேசுபவர் பழையதைப் பிடித்து தொங்குபவர்கள்.அடிமைகள் என்பது இந்தியாவில் பஞ்சமர் என்ற முறையில் வித்தியாசமாய் சாதிய ரீதியாக உரிமைகள் மறுக்கப் பட்டு வாழ்ந்தது ஒரு வகையில் அடிமை முறைதான் .அதன் கொடுமைகள்இன்னமும் ஆங்காங்கே தொடர்வது வருந்த்தக்கது என்றாலும் ,சட்ட ரீதியாக இன்றைக்கு தலித்துக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.சமூகத்தில் மாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாத மேல் சாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டம் முனகிக் கொண்டும் ,சதி செய்து கொண்டும் இருந்தாலும் தலித்துகளுக்குஇன்று நிலமை பரவாயில்லை ,இல்லையெனில் அம்பேத்காரின் பிறந்த நாளுக்கு பாம்பே வில் இவ்வுளவுபெரிதாய் கூட முடியாது.உபியில் மாயாவதி ஒரு அரசியல் சக்தியாய் வளர்ந்து இருக்க முடியாது.

இந்த மாற்றத்திற்கு நம் மதமா காரணம் ?இந்து மதம் கண்டிப்பாய் காரணம் இல்லை .கிருத்துவ இஸ்லாமியதாக்கமா காரணம் ? கண்டிப்பாய் இல்லை .ஒரு விதத்தில் இந்த எல்லா மதங்களுமே அடிமை முறையை ஒரு விதத்தில் ஆதரித்தே வந்தது.இந்து மதத்தில் ,போரில் தோற்றவர்களையும் , சூதில் தோற்றவர்களையும் அடிமையாக வைத்திருக்கஅனுமதித்தது.இது எல்லா வர்ணத்தார்கும் பொருந்தும் .ரிக் /அதர்வ வேதங்களில் அடிமை முறையைப்பற்றி இருக்கிறது ,அடிமைகள் அஃறிணையாகவே கருதப்பட்டனர்,மனு சாஸ்திரம் நம் இந்திய அடிமைமுறைக்குச் சாட்சி. மகாபாரத சூதுக் கதை எல்லோருக்கும் தெரிந்தது தானே .சுந்தரரை ஆள் கொள்ள வந்த இறைவன் காட்டியதும் அடிமை பத்திரிகையைத் தானே.இதிலிருந்தே நம் சமூக வழக்கத்தில் சாதி,பஞ்சமர் மட்டுமல்லாது நேரடியாகவே அடிமை முறை இருந்ததாகவே கொள்ளலாம் . இந்த லட்சணத்தில் இந்து மதம் என்ற கோடபாடு அடிமை/சாதி முறையை ஒழிக்க உதவியிருக்கும்.

கிருத்துவம் அடிமை முறையை அங்கீகரித்தாகவே விவியலித்தை படித்தவர்கள் சொல்கிறார்கள்.அமெரிக்க சிவில் போரின் போது பிரசிடண்ட் ஜெபர்சன் சொன்ன இந்த கருத்துக்களை படியுங்கள்

"[Slavery] was established by decree of Almighty God...it is sanctioned in the Bible, in both Testaments, from Genesis to Revelation...it has existed in all ages, has been found among the people of the highest civilization, and in nations of the highest proficiency iin the arts." Jefferson Davis, President of the Confederate States of Americaமற்றும்Exodus 21:20-21 "When a man strikes his slave, male or female, and the slave dies under his hand, he shall be punished. But if the slave survives a day or two, he is not to be punished; for the slave is his money." The word "money" in this case means property; it is translated "property" in the Modern Language,.

இல்லை விவியலித்தில் அந்த அர்த்ததில் சொல்ல வில்லை யென்றும் வாதிடுபவர்கள் ,இருக்கிறார்கள்சில ரெவரெண்டுகள் பைபிளில் அடிமை முறை பற்றி இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால்அடிமை முறை பற்றி பல வசனங்கள் பைபிளில் இருப்பதாகவேப் படுகிறது.இங்கு கேள்வி பைபிள்கருணை மிக்க இயேசுவால் அங்கீகரிக்கப் பட்ட பழைய ஏற்பாட்டிலும் ,புதிய ஏற்பாட்டிலும்அடிமை முறை பற்றி இருந்தால் அதை எப்படி அங்கீகரிக்க முடியும் ?ஒன்று பைபிள் இறைவனின் புத்தகம் என்ற நம்பகத்தன்மை பற்றிய கேள்வி எழுப்பலாம் ,காரணம் எல்லாம் தெரிந்த கருணை மிக்க கடவுள் தவறே பண்ணியிருக்க முடியாதில்லையா ?அல்லது அடிமை முறை இறைவன் கூறிய படி சரியானதாய் இருக்க வேண்டும் ,
24 மணிக்கூரில் சாவுறமாதிரி அடிக்காதிண்ங்கப்பா ..

இஸ்லாம் இதற்கெல்லாம் மேல் நபிகள் மெதினாவில் அவர் அரசை அமைத்த பிறகு அவருக்கான அடிமைகளையும் அவர் சார்ந்தவர்கள் அடிமைகளை வைத்திருப்பதையும் ஆதரித்தார்.நான் சொல்லவில்லை அப்பா இஸ்லாம் ஸ்காலர்கள்தான் சொல்லுகிரார்கள் .ஆனால் சூப்பராய் ஒரு சப்பைக் கட்டு அவர்கள் போரில் பிடிபட்ட முஸ்லீம்அல்லாதவர்கள் தானாம் .33:50 - "Prophet, We have made lawful to you the wives to whom you have granted dowries and the slave girls whom God has given you இப்படி பல இறைவசனங்களை திருக்குரானில் இருந்தும் ,ஹதிஸ்களிலும் இருந்தும் எடுக்க முடியும். அடிமைகளுக்கு உரிமை இருந்ததாக பலர் சொல்கிறார்கள் ,கண்டிப்பாய் பாரட்டப் பட வேண்டியதே.கேள்வி என்னவென்றால் மனிதன் எழுதிய புத்தகமாய் ஒழுக்க நூலாய் இருந்தால் அந்த காலக்கட்டத்தில்இந்த அளவிற்கு உரிமை கொடுத்தற்கானப் பாராட்டு . ஆனால் இறைவன் எழுதிய புத்தகம் ,அடிமை முறைகளை ஆதரிக்கிறதா ?இல்லை எனில் ஏன் இறைவன் ,மது குடிப்பது,விபச்சாரம் ,ஒரினச் சேர்க்கை போன்ற வற்றிற்கு தெளிவாய் கூடாது என்பவர் இதை மட்டும் ஏன் மறந்து போனார் ?

இப்படி இருக்குமோ ? கடவுள் நம்மை அடிமையாய் வைத்திருக்கிறார் ,ஆதலால் அவர் நமக்கும் கொஞ்சம் அந்த உரிமையய் தருகிறாரோ என்னவோ ?இங்கு என் கேள்வி இறைவனைப் பற்றியது அல்ல ,ஒரு விசயம் நல்லதா கெட்டதா என்பதற்கு உங்கள் இறைவனின் மறைகளை கேட்க வேண்டியதில்லை ..உங்கள் மனசாட்சியை கேட்டால் போதும். அப்படி கேட்டதன் விளைவால் தான் அமெரிக்க சிவில் வாரில் நிறைய அமெரிக்க வெள்ளைக்காரர்கள்தங்கள் சொந்த மக்களுடன் கறுப்பின மக்களுக்காகப் போராடினார்கள் ,ஜெபர்சன் மற்றும் பல ரெவரண்டுகள் மதத்தை இழுத்தும் அவர்கள் மனதை மாற்றிக் கொள்ளவில்லை ,அன்று சிவில் வாரின் முடிவு வேறு மாதிரியாக இருந்தால் அமெரிக்கா இந்தளவு வளர்ந்து இருக்காது .அது போல் இந்தியாவில் சாதிக் கொடுமையை பல உயர்சாதிக் கொடுமை எதிர்த்தவர்கள் மேல் சாதிக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் காந்தியும் ,நேருவும் ,பெரியாரும் சமூக அமைப்பில் உயர்வாய்கருதப்பட்டவர்கள் தான் .விவேகானந்தர் இந்து மதத்தின் வேதங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டியிருக்கவில்லை .ஆக எல்லா மதமும் ஒரு வகையில் அடிமை முறையை ஆதரித்து தான் இருக்கிறது .எல்லா மதங்களிலும் குறை நிறைகள் இருக்கத் தான் செய்கிறது .

எதற்கோ எழுத ஆரம்பித்து பதிவு தடம் மாறி விட்டது ,அடுத்த பதிவில் நம்மிடம் உள்ள ரேசிசம்பற்றி எழுதுகிறேன்

வாழ்க கன்னட பிரசாத்

வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் பாலியல் தொழில் சார்ந்த பெண்களை சார்ந்தவர்களை பற்றிய குறிப்புகள் இல்லாமல் ஒன்றையும் பார்க்க முடியாது.அதிகாரத்திற்கும் பணத்திற்கும் உடல் சுகம் கொடுக்கும் பெண்கள் இல்லாத உலகம் சாத்தியமில்லை என்பதை வரலாறு திரும்ப திரும்ப காட்டுகிறது .
ஆயினும் இத் தொழிலை பெரும்பான்மை யான நாடுகளில்பாலியல் தொழில் சட்ட விரோதமானதாகவே வைத்துள்ளது . இந்தியாவில் சட்ட விரோதமானது என்றாலும் பாம்பே ரெட் லைட் ஏரியாவில் கண்டு கொள்ள மாட்டார்கள் . எல்லா இடங்களிலும் பெரு நகரம் ,சிறு நகரங்களில் அதிகாரத்திலுள்ளவர்களின் தொடர்பு வைத்திருப்பவர்கள் போலிஸ் துணையுடனும் , சில சமயம் மறைவாகவும் அமோகமா தொழில் நடந்து கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் மாட்டிய கன்னட பிரசாத் என்னும் உயர் தர தொழில் தரகன் மாட்டியது பல கிளு கிளுப்பானத் தொடர்களை பத்திரிகை ஊடகங்கள் ஆரம்ப்பிக்க உதவியாகவும், நாம் அவர்களின் கிசு கிசு பாணியிலான நடிகைகளின் தொடர்புகளை படித்து நம்முடைய அறிவு கூர்மையைத் தீட்டிக் கொள்ளஉதவியதற்கு போலிஸாருக்கு நன்றி கூறவே வேண்டும்.

கன்னட பிரசாத் பெரும் தொழில் அதிபர்களுக்கும் பெரும் பண முதலைகளுக்கும் பத்திரிகைப் பாஷையில் அழகிகளையும் நடிகைகளையும் கொடுத்து வந்தான் என்பதே பெரும் குற்றச்சாட்டு. இதை ஒரு கார்ப்பரேட் அளவுக்கு பண்ணி வந்தானாம் ,சென்னை விபச்சார போலிஸ் காலம் காலமாக இவனுக்கு சேவகம் செய்து வந்தார்களாம் . நியாயமாய் பார்த்தால் இந்த அதிகாரத்தில் இருக்கும் நபர்களின் போட்டாக்கள் தான் முதல் பக்கத்தில்வர வேண்டும் ,ஆனால் பிடி பட்ட துணை நடிகைகளின் போட்டாக்களை தந்து விட்டு சாதித்த பெருமையுடன்பேட்டி கொடுக்கும் போலிஸ் காரர்களைப் பார்த்தால் எரிச்சலே வரும் .

உடலை விற்கும் எந்த ஒரு பெண்ணிற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் ? நேர்மையாகப் பார்த்தால் பாலியல் தொழிலாளர்கள் எவ்வுளவோ மேல் . காசு வாங்கியதற்கு அவர்கள் வேலையை யாவதுசெய்கிறார்கள் , இவர்கள் கடமையை விட்டு விட்டு மாமா வேலை பார்க்கும் இவர்களே கேவலமானவர்கள்.

இந்த விவகாரத்தில் இதை இவ்வுளவு பெரிய விசயமாக ஆக்கியிருக்கவே வேண்டாம் ,யாரோ பணம் நிறைய உள்ள முதலைகள் செய்து கொள்ளும் அசிங்கம் நமக்குத் கிசு கிசு பாணியில் தெரிந்ததில் சமூகத்திற்கு என்ன நன்மை. அப்படியே பெரிய மனிதர்களின் முகமூடிகளை கிழிக்க வேண்டும் எனில் தெளிவாகவே ஒரு அறிக்கை போலிஸால் குடுத்திருக்கப் பட வேண்டும் . அது முடியாது இவ்வுளவு நாள் படியளந்த படியளந்து கொண்டிருக்கும் முதலாளிகளின் பெயர்களை எப்படிச் சொல்ல முடியும், அதற்கு ஆண்மையும் முதுகெலும்பும் உள்ள போலிஸும் ஆட்சியாளர்களும் வேண்டும்.

மீசையும் , எளியவனிடம் வீரம் காட்டுவதும் ஆண்மையில்லை . சட்டம் கடமையை செய்யும் என்ற கேலிக் கூத்தை கேட்பதற்கே எரிச்சலாக வருகிறது.
விபச்சாரத்திற்காக கைது செய்யப்பட்டு டிவிக்களிலும் பத்திரிகைகளிலும் போட்டோ போடப்பட்ட எந்த நடிகை தண்டிக்கப் பட்டார்கள் ? கோர்டில் தகுந்த ஆதாரம் இல்லாததால் விடிவிக்கவேப் பட்டனர். சரி அப்படி அவர்கள் குற்றம் செய்யாதவராக இருந்தால் அவர் அசிங்கப் படுத்தப்பட்டதற்கு அதனைச் செய்த அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் என்ன தண்டனை ? அவர்களை தவறாக கேஸ் போட்டதற்காக கோர்டுகள் தண்டிக்க வேண்டும் , ஆனால் கோர்டுகளே ஏதாவது லூஸுக்கள் ஸ்ரீ தேவி என் பொண்டாட்டின்னு கேஸ் போட்டால் சம்மன் கொடுத்து அப்படியாவது நடிகைகள் நம்ம கோர்ட்டுக்கு வந்து நாமளும் பேப்பரில் வரமாட்டோமா என்று ஏங்கி நிற்கும் நீதி தேவதைகள் தான் நம் நீதிக் கூடங்களில் இருக்கிறார்கள் என்னும் போது என்ன சொல்ல ?

Any way , கிளு கிளு கதையை ஜுவியில் கொஞ்ச நாள் படிக்கலாம் ,வாழ்க கன்னட பிரசாத் .

Labels: ,

இந்து என்னும் அடையாளம்

ஸ்ரீ ஸ்ரீ பற்றிய என் பதிவில் வந்த ஜடாயுவின் பின்னூட்டத்தில் ஸ்ரீ ஸ்ரீ எழுதிய Hindu Identity பற்றிய கட்டுரையை பதிவு செய்திருந்தார் .

ஸ்ரீ ஸ்ரீ சொன்னது ஒரளவு நிஜம் என்றாலும் ஹிந்து ஐடெண்டி இல்லாமல் இருப்பது ஒரு வகையில் முட்டாள்தனம் என்றும் , சாதி யை ஹிந்துக்கள் தன் ஐடெண்டியாக வைத்திருப்பதும் ஒரு வகையில் இதற்கு காரணம் என்றும் சொல்லி இருந்தார் . அவர் கருத்தை ஆமோதிக்காமலும் அதே சமயம் மறுக்கமாலும் எனக்குத் தோன்றிய சிந்தனைகள் .

ஐடெண்டி என்பது பல சமூக காரணங்களால் ஒரு சம்சாரிக்குத் தேவைப் படுகிறது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும் .சாமியாருக்களுக்கேத் தேவைப்படுகிறது சம்சாரி எம்மாத்திரம் .

சமூகத்தில் ஐடெண்டியோடு இருப்பதால் பல நன்மைகள் இருக்கிறது , எப்படியிருந்தாலும் நமக்கு ஒரு அடையாளம் தேவையானதாகவே இருக்கிறது , ஹிந்துவாகவோ , பிராமணர்களாகவோ , தலித்துவாகவோ, கம்யூனிஸ்டாகவாகவோ ஏதோ ஒரு அடையாளத்துடன் இருக்கவே பிரியப்படுகிறோம். அதில் சில நம் சமூக அமைப்பில் வளரும் பருவத்திலேயே சாதி ,சமயம் ,மொழி என்று திணிக்கப் படுகிறது . சில அடையாளங்களை நாமே நம் மேல் ஏற்றி வைத்துக் கொள்கிறோம் பெரியாரிச்ட்,கம்யூன்ஸ்ட்,லிபரல் ,வலதுசாரி போன்றப் பிரிவுகளை நாமே நம் சிந்தனையால் நம் மேல் ஏற்றி வைத்து கொள்ளும் அடையாளங்கள் .

சரியோத் தவறோ அடையாளங்கள் இல்லாமல் வாழ முடியாது நமக்கும் நம் இகோவிற்கும் தீனிப் போடும் அடையாளங்களை விட்டு விட்டுப் போவது என்பது சாதரணப் பட்டவர்களால் முடியாது என்பது உண்மையே .

அடையாளம் என்று வந்து விட்டால் அவரவற்குத் தேவையான அடையாளங்களுடன வாழ்வதை எப்படித் தவறென்றுச சொல்ல முடியும் .ஒரு அடையாளம் இன்னொரு அடையாளத்தை விட உயர்ந்ததா என்ன ?

பொதுவாக பெரும்பாலோனர் தம் அடையாளங்களை இடம் பொருளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள் . கிராமத்தில் நம் தெருவில் இன்னாரின் மகன் /மகள் மற்ற சாதித் தெருக்களில் இந்த சாதி பையன் (செட்டித்தெருப் பையன் /கோனாருப் பையன் )கொஞ்சம் வெளியே வ்ந்தால் கிராமப் பெயரே நம் அடையாளம . மற்ற மதக் காரர்களுக்கு -ஹிந்து நண்பர் ,முஸ்லீம் நண்பர் , மற்ற மொழிக்காரர்களுக்கு -தமிழ் நண்பர் ,தெலுங்கு நண்பர் வெளியே வந்து விட்டால் - இந்தியன் , அமெரிக்காவில் -தேசி / சவுத் ஏசியன் என்பது துணைக்கண்டத்தவரை குறிக்கும் சொல் (இந்திய/பாக்கிஸ்தான்/பங்களாதேஷ்/ஸ்ரீலங்கா )

புஷ் யை ஆதரித்தால் -வலது , ஒரின திருமணத்தை ஆதரித்தால் -இடது ,அல்ரா லிபரல் இப்படி வசதிக்காகத்தான் அவரவர்கள் தன் அடையாளங்களை வைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு ஹிந்துவிடம் ஹிந்து என்று அடையாளப்படாமலா இருக்கிறார். நமக்கே பேரைப் பார்த்தாலும் மற்ற அடையாளங்களிலும் ஹிந்து வென்று தெரிந்து விடுவதால் சாதி பற்றி யோசிக்க ஆரம்ப்பித்து விடுவார்கள் .

அதிலும் சிலர் பேரைக் கேட்டாலே சாதியை சொல்லிவிடுவார்கள், பேச்சை வைத்தும் சாதி கண்டுபிடித்து விடுவார்கள்.

சிவா ,சண்முகம் ,அவினாஷ் என்று யார் பேர் வைத்துக் கொள்கிறார்கள் ஹிந்துக்கள் தானே . தமிழ்செல்வியும் , புகழேந்தியும் கூட தமிழ் ஹிந்துக்கள் தான் வைத்திருப்பார்கள் .

பெரும்பால ஹிந்துக்கள் ஹிந்து அடையாளங்களோடு தானே வாழ்கிறார்கள் ,ஏதோ முஸ்லீம்கள் மட்டும் தான் மத அடையாளங்களோடு வாழ்கிறார்களா என்ன ? திரு நீறு, குங்குமம்,சந்தனக் குறி ,பூணூல் போன்றவை ஹிந்து அடையாளங்கள் இல்லையா என்ன ?

ஹிந்து அடையாளம் இல்லாத எதாவது இடத்தை இந்தியாவில் காட்டுங்கள் . இதை தவிர ஹிந்துக்கள் என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறார் ஸ்ரீ ஸ்ரீ என்றுத் தெரியவில்லை .

ஸ்ரீ ஸ்ரீ சொன்ன மாதிரி சாதி ,மூட நம்ப்பிக்கைகளும் தானே ஒரு சாதாரண ஹிந்துவுக்கு அடையாளங்களாக இருக்கிறது. எந்த ஹிந்து பிரயாணமத்தையும் தியானத்தையும் பார்த்தான் .

வேண்டுமானால் இப்படிச் சொல்லாம் ஹிந்து என்ற அடையாளத்தை உரக்கச் சொல்ல இந்திய படித்த ஹிந்துக்க்கள் கூச்சப் படுகிறார்களாக இருக்கலாம் ? இந்து என்பவன் ,தான் ஒரு இந்து என்பதிற்கு பதில் மொழியாலும் , சாதியாலும் பிளவு பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார் போலும் .

மொழியாலும் ,சாதியாலும் பிளவு பட்டுக் கிடப்பது தவறு தான்,ஆனால் ஹிந்து என்று சொல்வதாலும் தான் பிளவு ஏற்படும். அடையாளம் தேவை என்றால் அவரவர்க்கு தேவையான அடையாளங்களைத் தான் தேர்ந்து எடுப்பர் . அதை தவறு இந்த அடையாளம் தான் உனக்கு சரி எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை .

தமிழன்,கன்னடன் எண்று சொல்லாதே இந்தியன் என்ரு சொல் என்று வற்புறுத்துவது கூட ஒரு வகையில் வன்முறை தான் .அது போலத் தான் நீ இந்து என்று சொல் என்று வற்புறுத்துவதும் ஒரு வகையில் வன்முறை தான் .

மேலும் இங்கு ஒன்றும் இந்துக்கள் invisible ஆக ஒன்றும் இல்லை உரக்கச் சொல்வதற்கு , சொன்னாலும் சொல்லா விட்டாலும் இந்து என்பவன் அவன் அடையாளங்களோடு தான் வாழ்கிறான் ,கடவுள் இல்லை என்று சொல்லுகிற கருணாநிதி வீட்டில் கூட இந்து அடையாளங்கள் தான் .நம் சமூகத்தில் கம்யூனிஸ்டுகள் கூட மத அடையாளம் இல்லாமல் இருந்ததில்லை உதாரணம் சுர்ஜித் சிங் , இதில் யாரைப் போய் குறை சொல்ல .

சுயம் அழித்தலே உண்மையில் ஆன்மீகத்தின் உச்சம் என்று திரும்ப திரும்ப நம் இந்திய தரிசனங்க்கள் உணர்த்தினாலும் சுயம் அழித்தல் ஒன்றும் சுலபமல்ல ,சம்சாரிக்கு மட்டுமல்ல இங்கு ஞானிகளாக காட்டப் படுபவர்களுக்கும் கூட .

படித்ததில் பாதித்தது

படிப்பது என்பது அம்புலி மாமாவில் இருந்து ஆரம்ப்பித்து இப்போது கண்டைதையும் படிப்பது என்று ஆகி விட்டது ,படித்ததில் பிடித்ததை எழுதுவது என்பது கொஞ்சம் கடினம் . ஆனாலும் எழுத முயற்சிப்பதில் ஒன்றும் தப்பில்லை என்று தான் எண்ணுகிறேன் .

பாலகுமாரனின் கடலோரக் குருவிகள்

நல்லதொரு நாவல்.குறிப்பாய் கடைசியில் உள்ள கதைக்காகவும்,கடைசி இரண்டு அத்தியாயங்களின்எழுத்துக்காகவும் எனக்குப் பிடிக்கும் .அதிகம் வாசிப்பு அனுபவம் இல்லாத ஒருவருக்கும் புரியும் நடை எனக்குப் பிடிக்கும்.பால குமாரன் ஒரு காலத்தில் அதிகம் பிடிப்பவராக இருந்தார்.

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள்
சுஜாதாவின் இந்தக் கதைகளை பிடிக்காமல் இருப்பது கடினம் .அவரின் நடை அலாதியானது.சுஜாதாவின்மேல் சில விமர்சனங்கள் இருந்தாலும் அவர் தவிர்க்க முடியாதவர் ,அவரின் எல்லா எழுத்துக்களையும்படிக்க முயற்சிப்பேன், வசந்த் கணேஷ் தவிர :-) .சுஜாதா வின் நடையும் அவரின் எள்ளலும் பிடித்தது .

சு செல்லப்பாவின் வாடிவாசல்

படித்துப் பாருங்கள். ஜல்லிக் கட்டு பார்ப்பது போன்ற பிரமிப்பை கொடுக்கும் நாவல்.இப்பவும் எப்பவாதுஎடுத்து ஒரே வாசிப்பில் படிப்பேன்.நன்றி காலச்சுவடுக்கு இதை மறு பதிப்பு இட்டதுக்காக.

தொ பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள்

நம் கலாச்சாரத்தை பற்றிய ஒரு ஆய்வு மாதிரியான நூல் ,நெல்லை கன்யாகுமரி மாவட்டங்களில்இன்னமும் செய்யப்படும் சில பழக்க வழக்கங்களையும் இந்த புத்தகம் சொல்லியிருந்தது .அத்தன் என்னும்சொல் பண்டையத் தமிழில் அப்பாவைக் குறிப்பதாக சொல்லியிருந்தார்,இன்னமும் தமிழ் முஸ்லீம்கள்அத்தா என்று கூப்பிடுவதை ஞாபகப் படுத்தியது.

அ.முத்துசாமியின் "அங்கே எந்த நேரம் / மஹாராஜவின் ரயில் வண்டி
பிடித்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் .இந்த இரண்டு சிறுகதை தொகுப்புகளும் அருமை.அவர்நடையில் இயல்பாய் இருக்கும் பகடி ரசிக்க வைக்கும் .இவரைப் பற்றி தனிப் பதிவேப் போடலாம் அவ்வுளவுப் பிடிக்கும் எனக்கு.

ஷோபா சக்தியின் ம்

ஷோபா சக்தியின் கதை உலகம் ஈழப் போரட்டத்தின் மறுபக்கங்களையும் புலம் பெயர் வாழிவின்வலிகளையும் தொட்டுச் சொல்வதும் அவரின் நடையும் எனக்குப் பிடிக்கும் .கொரில்லாவும் பிடித்ததுதான்.சத்திய கடுதாசியில் அவர் எழுதுவதையும் வாசித்து வருகிறேன்.

ஜெயமோகனின் ஏழாம் உலகம்
அவரின் மற்ற நாவல்களில் இருந்து வேறுபட்ட மொழி நடையை கொண்ட நாவல்.அவரின் விஷ்ணு புரம்அல்லது பின் தொடரும் நிழல் போல் கடினமான மொழி நடையோ அல்லது சிக்கலான கதை அமைப்போ இல்லாத இந்த நாவல் வாழ்க்கையில் நாம் சந்திக்க மறுக்கும் ஒரு கறுப்பு உலகத்தின் கதை.படித்த பின் விசாரித்தில் இது நடக்கிற உண்மை என்றே சொன்னார்கள். ஜெய மோகனை மறுப்பவர்கள் கூடஇந்த நாவல் பிடிக்கும் .ஜெய மோகனின் சிறு கதைகளில் பிடித்த மானது மாடன் மோட்சம் ,டார்த்தீனியம் ,ஜமம்மதிகினி

சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதைநம்ம

நாகர்கோவில் வேப்ப மூடு ஜங்க்சனை வைத்து புனையப் பட்ட நாவல் ,அதன் மொழிநடையும் பகடியும் எனக்குப் பிடித்தது.ஜெ ஜெ யின் குறிப்புகள் சில சமயம் சலிக்க வைக்கும் ,இதுஅப்படி இல்லை என்று கண்டிப்பாய் சொல்லலாம..இவர் மொழி பெயர்த்த தழியின் தோட்டியின் மகன் அருமையானது.

தோப்பில் முகமது மீரானின் கடலோர கிராமத்தின் கதை

தேங்காப் பட்டின இஸ்லாமிய வாழ்க்கை பற்றிய நாவல் .அருமையான நடை ,மொழியும் ,இக்கதையின்ஆக்கமும் படிக்கத் தூண்டியவை .

சாருவின் நோ நோ கதைகள்

இச் சிறுகதை தொகுப்பு அவரின் மொழி நடைக்கும் நையாண்டிக்கும் எழுதாப் பொருள் என ஒண்ணும் கிடையாது என மரபுகளை உடைக்கும் தன்மைக்காகவும் பிடிக்கும் .

கி ராஜ நாரயணின் கோபல்ல புர கிராமம்

கிரா வின் ரசிகன் நான் ,மொழி நடைக்காக வே படிக்கலாம்.மற்ற நாவல்களும் படித்து உள்ளேன்.வெகு ஜன ஊடகத்திலும் தெரிந்தவர் என்பதால் நண்பர்களுடன் இவர் எழுத்தைப் பற்றி விவாதிக்க முடியும் .

ராம கிருஷ்ணனின் உப பாண்டவம்

மகாபாரதத்தின் கதைகளை ஒத்த கதை.நல்ல வாசிப்பனுபவம் ,மகாபாரதம் எத்தனை முறை படித்தாலும்அலுக்காத ஒரு காவியம் ,அதை படிப்பதால் வரும் சிந்தனைகள் அருமை.இதைப் போல பாரதத்தின் கதைகளை வித்தியாசமாக எழுத முயற்சிக்கலாம் .

இரண்டாம் ஜாமத்தின் கதை -சல்மா

சல்மாவின் கவிதை பிடித்து ,இந்த புத்த்கமும் ஒரு நல்ல முயற்சி .இது பல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் சல்மாவின் எழுத்தில் குறே யேதும் இல்லை

நாகூர் ரூமியின் திராட்சைகளின் இதயம்

சூபி ஒருவரைப் பற்றிய கதை ,சூபி ஆன்மீகத்தின் மேல் நம்பிக்கை இருந்தால் படிக்க வேண்டியப் புத்தகம்,கதை என்ற் போதிலும் இது ரூமியின் அனுபவமாக இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம் .

பெருமாள் முருகனின் கூளமாதாரி

ஒடுக்கப் பட்டவர்களின் வாழுக்கை முறையைப் சொல்லிய நாவல்,சில உண்மைகள் சுடும் .மாயா உலகில் சமத்துவம் பேசிக் கழியும் மக்களுக்கு இது அதிர்ச்சித் தரும் நாவல் .இந்த மாதிரியான வாழ்க்கை முறை இன்று இருக்குமா என்பதில் சந்தேகம் இருந்தாலும் 20 வருடங்களுக்கு இப்படி இருந்தது என்பதில் ஐயமில்லை.

இமையத்தின் கோவேறு கழுதைகள்

துணி வெளுக்கும் வண்ணார் வாழ்க்கை முறை பற்றிய கதை ,கிருதுவராக மாறிய்ம் பெரிதாய் ஒன்றும் வாழ்க்கை முறையில் மாற்ற மில்லை .சில நிகழ்ச்சிகள் எங்கள் ஊரில் இருந்த வண்ணார் குடும்பத்தின் வாழ்க்கையை ஞாபகப் படுத்தியது.இது போன்ற கதைகள் தான் ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை வரலாற்றுக்கு சொல்லும் .

இது அனைத்தையும் என் நினைவில் இருந்து எழுதியது ,அப்பொழுது தான் மனடில் நின்றதை எழுத முடியும் என்ற நினைப்போடு .கவிதைத் தொகுப்புகளையும் ஆங்கிலப் புத்தகங்களையும் இதில் சேர்க்க வில்லை .
வாசிப்பதில் ஒன்றும் பெருசில்லை என்ன புரிந்து கொண்டோம் என்பது தான் முக்கியமானது ..வாழ்க்கையை எல்லா பக்கங்களில் இருந்தும் புரிந்து கொள்ளவே என் வாசிப்பு முயற்சி , இதுவும் ஒரு தேடல்தான் ,எனக்கான புத்தகம் எங்கோ ஒளிந்திருக்கும் அது தெரியும் வரை வாசிப்பு தான் சாஸ்வதம்

ஆஙகிலத்தில் படித்தது குறைவு தான் ,பெரும்பாலும் அரசியல் அல்லது ஆன்மீக புத்தகங்கள் தான் படிப்பது ,ஒரு காலத்தில் சிட்னி செல்டன் ,ராபர்ட் லூடம் ,ஜான் கிரிசாம் போன்றவர்களின் கதைகளை படித்துக் கொண்டிருந்தேன் ,அதை தாண்டி ஆங்கிலத்தில் இலக்கியத் தரமுள்ள கதைகளுக்கு நகர முடியவில்லை .மொழி அறிவின் போதாமையும் ஒரு காரணம் .நான் பிக்சன் வாசிப்பு இப்போது அதிகம் ஆகியிருக்கிறது ஆனால் அதிகம் அரசியல் படிக்கிறது போல் தோன்றுகிறது.

Labels:

கவித ?

சில கிறுக்குப் பிடித்த நாட்களில் கிறுக்கிய எழுத்துக்கள்,முன்னமே சொன்ன மாதிரி கவிதை மேல் எனக்கு காதல் உண்டு ,எனவே கவிதை என்று என் எழுத்தை சொல்லி கவிதையை கொச்சைப் படுத்த முனைவிதில்லை ..

ஏதோ சந்தர்ப்பத்தில் எழுதிய கவிதைகளுக்கு தலைப்பை இன்று தான் கொடுத்தேன் ,தலைப்பு சரியா அல்லது நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு தோதான தலைப்புகளை ..

கடைசி கிறுக்கலுக்கு தலைப்பு வைக்கக் கூட கற்பனை பஞ்சம் ..
உங்களுக்கு ?

எல்லா நாய்க்கும் ஒரு நாள்


திருடனைப் பார்த்து குரைத்தலில்
உயிரை இழக்க சாத்தியம்
வீட்டுக்காரனின் சொந்தத்தை குரைத்தலில்
அடிகிடைக்கும் சாத்தியம்
அவரின் பிள்ளைகளுக்கு ஒரு செல்லக் குரைத்தல்
அம்மாவுக்கோ ஒரு விசுவாச குரைத்தல்
மார்கழி மாசம் பருவக் குரைத்தல்
அதுவும் இப்போ இல்லை
ஆப்பிரேசன் பண்ணியாச்சு
உரத்துக் குரைத்தலே உயர்வு
பார்த்து குரைத்தலே வாழ்வு
எல்லா நாய்களுக்கும் ஒரு நாளுண்டு
அவர்களுக்கேயாய்
அன்று நான் குரைப்பேன்
எனக்குப் பிடித்த மாதிரி
எனக்கு மட்டுமேயான குரைத்தல்

------

புத்தியின் வார்த்தைகள்

எனக்கு உவப்பாயில்லை
ஏகாந்த வேளையில்
கனவுகளாய் நான் ஒரு
கவிதையை எழுதுகையில்
உன் வார்த்தைகளை
தத்துவங்களை எனக்கானக்
கவிதையில்
நீ
திணிப்பது
உவப்பாயில்லை எனக்கு



----
வீசப் படும் குண்டுகளின்
வெப்பத்தையும்
தாண்டி
உன்னை அணைத்த சூடு
இன்னமும் தெரிகிறது
உயிர் பிழைத்தலே பிரதானம்
இன்னொரு முறை உன் சூடு
கிடைப்பதற் காவது

Labels: , ,

அமெரிக்க அடிவருடி

அமெரிக்கா என்பது இந்தியாவின் அறிவு ஜீவி வட்டத்தில் ஒரு ஏதேச்சாதிகார மையமாகவும் ஆட்சி கவிழ்ப்பு அரசியல் கொலைசெய்யும் ஒரு நாடாகவே இருந்து வந்தது ,அதில் பேரளவு உண்மை இருந்தாலும் அமெரிக்காவின் மறுபக்கமான ஜனநாயகம், திறமைகாரர்களை எங்கு இருந்தாலும் அமெரிக்கா வர ஊக்குவிக்கும் அரசும் , கனிவான மக்களும் உள்ள ஒரு நாட்டையும் காட்டத் தவறியது.

ஆனால் சோவியத்தின் நிறைகளை மட்டுமே பார்த்து குறைகளை பார்க்க மறுத்த ஒருப்பார்வை இடது சாரி சார்ந்த பார்வையாளர்களால் உருவாக்கப் பட்டிருந்தது.

இந்தப் பாரபட்ச பார்வை பார்வை எல்லா தர மக்களிடமும் ஒரு விதத்தில் அமெரிக்க பற்றிய வெறுப்பை கொடுத்து வந்தது சமீபத்திய காலம் வரை நடந்து வந்ததொரு யாதார்த்தம் .கேரள சேட்டன்மார்கள் பருவ மழை வரவில்லா விட்டாலும் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் சதி செய்து விட்டதாக பேசுவார்கள் . சோவியத் ரஷ்யா நமக்கு நண்பர்களாகவே அடையாளம் காட்டப் பட்டோம் , சாதாரண மக்களிடத்திலும் கூட ரஷ்யா பாசம் இருந்ததிற்கு காரணம் அன்றைய பலத் தலைவர்கள்சோவியத் ரசிகர்களாக இருந்ததும் ஒரு காரணம் .ஏகாதிபத்தியம் என்பது ஏதோ அமெரிக்கா மட்டும் பண்ணுகிற விசயம் போல் பேசும் இவர்கள் சோவியத் நடத்திய நாடு பிடிக்கும் அநியாயங்களின் மேல் ஒரு விமர்சனத்தையும் சொல்வதில்லை . இன்னமும் கூட சோவியத் விசயத்தை விமர்சனம் செய்தால் நல்லதொரு அர்ச்சனை கிடைக்கும்.

சோவியத் நமக்கு பல இக்கட்டான விசயங்களில் உதவியிருக்கிறது , அமெரிக்கா பாகிஸ்தானுடன் சேர்ந்து சில பல நமக்கெதிராய் செய்து உள்ளது , அதை நான் இல்லை என்று சொல்ல நான் முட்டாள் ஒன்றும் இல்லை.

ஆனால் இன்றைய மாறி வரும் உலகச் சூழலில் நடு நிலைப் பார்வையில் சோவியத்தின் தவறுகளையும் ,அமெரிக்காவின் வெற்றிக்கானக் காரணங்களையும் நாம் பார்க்கத் தவறினால் அது ஒருவருடைய புரிதலின் குறைபாடே அன்றி வேறல்ல , இது அமெரிக்க அதரவு /சோவியத் எதிர்ப்பு என கண் மூடித் தனமாய் பேசுபவர்களுக்கும் பொருந்தும் .

இன்றையக் காலச்சூழலில் அமெரிக்கா என்பது தேவைப்படுகின்ற ஒரு ரவுடி. அமெரிக்க உணர்வுகளைப் பொறுத்தே இன்றைய உலகத்தின் எல்லா நாட்டு அரசியலும் நடக்குகிறது ,வரும் காலங்களில் அதன் பலம் சைனா , ஐரோப்பா ,இந்தியா வளர்ச்சிகளால் ஒரளவுக்கு மாறலாம் என்றும் கூட இது தான் நிதர்சனம் இன்று.அமெரிக்கா அடாவடியாக செய்யும் பல காரியங்கள் அமெரிக்கர்களிலேயே பாதி பேருக்கு ஒப்புமை கிடையாது .

அமெரிக்காவில் நான் அறிந்த வரையில் கற்றுக் கொள்ள வேண்டியது அதன் தனி மனித சுதந்திரம் பற்றிய கொள்கை மற்றும் Dynamic ஜனநாயகம் . ஜனநாயகம் அருமையாக இங்கு வேலை செய்கிறது . யாரோ இணையத்தில் புளோரிடா விவகாரத்தை மட்டும் சொல்லி அமெரிக்காவின் ஜனநாயகம் கேலிக் கூத்து என்று கருத்துத் தெரிவித்திருந்ததைப் படித்த போது சிரிப்பு தான் வந்தது.

அமெரிக்காவில் ஷெரிப்பில் இருந்து பப்ளிக் அட்டெர்னி வரைக்கும் தேர்ந்தடுக்கப் படுபவர்கள் தான் .சும்மா உடன் பிறப்புகளுக்கும் , ஜால்ராக்களுக்கும் கொடுக்கும் பதுவி அல்ல .அதனால் தான் அவர்கள் தங்களை தேர்ந்த எடுக்கப் பட்டவர்களின் மன நிலையை புரிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள் ,சான் ப்ரான்ஸ்கோவில் அல்ரா லிபரலும் ,டெக்சாசில் இவாஞ்சுவலிஸ்டும் பதவியில் வருகிறார்கள்.மக்களின் மனோ நிலையை பிரதிபலிக்கும் ஒரு தலைமை ,அது தானே சரியான ஜனநாயகம்.


அது மட்டுமல்ல அருமையான பெடரல் அமைப்பு அது .மாநிலங்களுக்கு அதிகாரங்கள் அதிகமே , நிறைய விசயங்கள் மத்தியஅரசு தலையிட முடியாது .அது போல் சிட்டிக்களுக்கும் ( நம்ம பஞ்சாயத்து போல்) அவர்களுக்கான பட்ஜெட்டுகளும் அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப் படுவது போல் அருமையான விசயம் எதுவும் இல்லை . நாம் செலுத்தும் வரி எப்படி செலவழிக்கப் படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒவ்வொருவனுக்கும் உரிமை இருக்கிறது . வீட்டில் இருந்த படியே இணையத்தில் தெரிந்துகொள்ளலாம் .

தொழிலாளர் உரிமைகள் கண்டிப்பாய் நம்ம ஊர்களை விட அதிகமே .ஸ்டிரைக் பண்ணுவது மட்டும் தான் தொழிலாளர் உரிமையா என்ன ,அது கூடப் பண்ணலாம் அதற்காக பொதுச் சொத்தையோ ,தனியார் சொத்தையோ சேதப் படுத்த முடியாது.

கோர்டில் பொய் சொல்வது தான் பெரிய குற்றம் ,நம்ம ஊரில் எங் கையெழுத்து இல்லை என முதலமைச்சரே சொல்லலாம் .கோர்டும் சும்மா இருக்கும் .கிளிண்டன் விவகாரத்தில் அவர் பொய் சொன்னது தான் அவரை நாற அடித்தது .

இன்றைக்கு இராக் விவகாரத்தில் பெரும் எதிர்ப்பு குரல் வந்தது இங்கிருத்தும் தான். நைஜர் விவகாரத்தில் ஜனாதிபதி சொன்னது தவறு என்று சொல்ல வைக்க இங்குள்ளவர்களால் முடிந்தது. காங்கிரசில் ஈராக்குக்கு அதிகம் காசு கொடுக்க முடியாது என்று ஆப்பு வைக்க முடிந்தது , ஒரு ஜனநாயக நாட்டில் ஒருவர் அதிகாரத்தை தவறாய் பயப் படுத்தினால் இப்படி அடுத்த எலெக்ஸனில் தான் காட்ட முடியும் .அமெரிக்கா செய்ததற்கு வக்காலத்து வாங்கும் முயற்சில்லை என் பதிவு .

என்னுடைய எண்ணம் என்ன வென்றால் ஜனநாயக நாட்டில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு .அல்குவைதா டிரேட் சென்ரர் தாக்குதல் நடக்காதிருந்தால் புஷ் ஈராக் மேல் படையெடுக்க காங்கிரஸ் /செனட்டில் இருந்து பெற்றிருக்கவே முடியாது . தங்களின் மேல் குண்டு விழக் காரணம் ஈராக் தான் என்று சொல்லப் படும் போது எந்த மனிதன் தான் சும்மா இருப்பான் , அதனால் தான் மக்களின் ஆதரவும் செனட்டர்களின் ஆதரவும் இருந்தது . சொன்னது எல்லாம் தவறு என்று தெரிந்தது என்றதும் மக்கள் ஆதரவு குறைந்தது தேர்தலில் சரியான அடி வாங்கினார்கள் . இது ஒரு ஜனநாயக நிகழ்வா இல்லையா . சோவியத்தில் இன்னமும் என்ன நடக்கிறது என்பதை யாருக்கும் தெரியவில்லை . புடின் புஷ் யை விட மோசமாய் தான் நட்ந்து கொள்கிறார்.சைனா நடத்தும் அநியாங்களை கேட்கவே ஆளில்லை.

ஆனால் இன்றையச் சூழலில் அமெரிக்க எதிர்ப்பு பாலஸ்தீனிய பிரச்சினையை மையம் கொண்டே உள்ளது , இராக் விவகாரத்தில் அமெரிக்காவின் மேல் தார்மீகக் கோவம் உலகத்தில் முஸ்லீம்களுக்கு இருக்கிறது.

ஆனால் இணைய இஸ்லாம் நண்பர்கள் இஸ்லாம் நாடுகளில் இருக்கும் எல்லா விசயங்களும் பாலஸ்தீனிய பிரச்சினை யை மட்டுமே மையமாகப் பார்க்கிறார்கள். அமெரிக்காவை மட்டும் அனல் கக்கும் விழியுடன் விசம் கக்கும் அவர்கள். அவர்களே ஆதர்ச நாடுகளான சவுதி அரேபியாவும் ஜோர்டனும் அமெரிக்க ஆதரவு நாடுகளாக இருப்பதைப் பற்றி எந்த விமர்சனமும் நான் இணையத்தில் பார்த்ததே இல்லை. நியாயமாய் அவர்களைத் தானே இவர்கள் திட்ட வேண்டும். அமெரிக்கா மற்ற நாடுகள் விசயத்தில் எப்படி யிருந்தாலும் அவர்களின் சொந்த மக்களை சந்தோசமாய் தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த இஸ்லாமிய நாடுகளின் மக்கள்எவ்வுளவு சந்தோசமாய் இருக்கிறார்கள். நம்முடைய பாகிஸ்தான் நண்பர்களில் எல்லா பணம் உள்ள நண்பர்கள் எல்லாரும் அமெரிக்காவில் வாழ்வதையே விரும்புகிறதற்குக் காரணம் என்ன ? எல்லோரும் அமெரிக்க வாழ்க்கையை விரும்பினாலும்டெஸ்பரேட்டாக இருப்பது யார் ?
எல்லா விசயங்களிலும் சும்மா அமெரிக்காவை மட்டுமே குறை சொல்லாதீர்கள் .

அமெரிக்கா செய்வதற்கெல்லாம் வக்காலத்துவாங்கவில்லை நான் . நம் நாட்டில் உள்ள மக்களும் அரசியல் தலைவர்களும் ஒழுங்காய் இருந்தால் ஏன் அமெரிக்கா பிரச்சினை பண்ண முடிகிறது . ஒற்றைப் பார்வையில் எல்லாவற்றிற்கும் விளக்கம் சொல்ல முயற்சிக்காதீர்கள் சன்னலை திறந்து கொஞ்சம் வெளியேயும் பாருங்கள்.

PS

தலைப்பு உதவி -கால்கரி சிவா. அவரிடம் இருந்து சுட்டது

Labels: ,

தேடலின் இயல்பு -1

மதம் பற்றிய விமர்சனங்கள் பல இருந்தாலும் ,இறை குறித்த தேடல் தொடர்ந்து செய்தே வந்துள்ளேன். ஆன்மீக நாட்டம் அதிகம் ஆக ஆக மதம் குறித்த விமர்சனங்களும் அதிகம் ஆகியது . ஆன்மீக்ம் என்பது கோவிலுக்குச் செல்வதோ அல்லது அவரவர் மதங்களின் பழக்கப் படி கடமையை செய்வதோ அல்ல என்பது
புரிந்தது . கடவுள் மறுப்பு அவர் மேல் வைக்கப் படும் விமர்சனங்களும் கூட ஒரு வகையில் ஆன்மீகமே . மதம் பற்றி பல குற்றச்சாட்டுகள் எனக்கு இருந்தாலும் கோவிலுக்குப் போவது பிடிக்கும் அதற்காக தீபாவளி ,பொங்கல் நாட்களில் கண்டிப்பாய் போகே ஆகி கூட்டத்தில் இடிபட்டு இரண்டு பேரை மனதில் திட்டுவதற்கு கோவிலுக்கே போக வேண்டாம் . அதீத வேசம் கட்டும் பக்தியாளன் நான் இல்லை. ஆனால் இந்தியாவில் குறிப்பாய் தமிழ் நாட்டில் கோவில் பார்க்கவே இன்னுமும் ஆசை , சாமிகும்ப்பிடுவது என்ற சம்பிரதாயம் கடந்து புரிந்து கொள்ளவே கோவில் செல்வேன் . இங்கே அமெரிக்காவில் கோவில் செல்வது சம்பிரதாயம் மட்டுமே ,முன்னேல்லாம் சாப்பிடவே செல்வேன் .
இப்போது மனைவிக்காகவும் ,நண்பர்களுக்காகவும் .

ஆனால் தேடுதலை ஆன்மீக குருக்களை கவனித்தலையும் அவர்களின் கருத்துக்களை படிப்பதும் மூலமாக தொடர்ந்து வந்தேன். ஆனநத விகடனில் மனசே ரிலாக்ஸ் புகழ் சுகபோனந்தா வின் பகவத்கீதை லெக்சர்களுக்கும் ,இரண்டு தடவை அவரின் LIFE கோர்ஸ் போயிருக்கிறேன் .அவரின் பேச்சுத் திறமை எனக்குப் பிடிக்கும் .லைப் புரோகிராமில் தியானம் ,சில விளையாட்டுக்கள் , கலந்துரையாடல் ,நடனம் என்று ஒரே மிக்ஸ் யாய் இருக்கும் நன்றாகவே இருக்கும் . ஆனாலும் தீவிரமான ஒரு புரிதலும் ஏற்படவில்லை .அவர் பலவற்றை அறிவு பூர்வமாகவும் ,தர்க்க பூர்வமாகவும் விளக்க முயற்சி செய்த்தை நான் புத்த்கங்கள் வழியாகவே செய்து கொண்டிருந்தேன் . சுகபோனந்தா ஒரு அறிவு ஜிவியாகவும் ,வேதங்களையும் பல புத்தகங்களை நன்கு படித்த தர்க்க ரீதியான ஒரு சாமியாராகத் தான் பார்த்தேன். இருந்தாலும் இன்னமும் அவரின் பேச்சுக்களை கேட்கப் பிடிக்கும் ,அவர் இங்கு வந்தால் அவரின் பகவத் கீதா லெக்சர்களுக்கு போய் வர முயற்சிப்பேன்.

ஐந்து வருடங்களுக்கு முன் கோயம்பத்தூரில் கோவைக் குற்றாலம் சென்று வரும் வழியில் கார் ஓட்டுனர் வெள்ளியங்கரி மலையில் உள்ள தியான மண்டபம் பற்றி சொல்லியதால் அங்கு சென்று வந்தேன் .தியான லிங்கத்தின் சுற்றியிருக்கும் ஒரு தியான அறையில் இருந்து தியானம் செய்ய முயற்சி செய்த போது ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது ,ஆனால் என்னுடன் வந்திருந்த அம்மா,அப்பா அக்கா ஆகியோரை அதிகம் நேரம் காக்க வைக்க விரும்பாமல் சில புத்த்கங்கள் மட்டும் வாங்கி விட்டு திரும்பி விட்டேன் .புத்தகங்களை படித்த போது ஜக்கி மேல் ஒரு பிரியம் உண்டானது .அவரின் பல பதில்கள் சுகர் கோட் இல்லாமல் தெளிவாக இருக்கும் .அவர் பக்தி பற்றி சொல்லிய கதைகள் சிந்திக்க வைத்தது. அவரும் தியான வகுப்புகள் நடத்துகிறார் என்று நண்பர்கள் சொல்லித் தெரியும் . ஜக்கி ஒரு குருவுக்கான எல்லாத் தகுதியும் உள்ளவர் என்பது என் எண்ணம் . அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் எனக்குத் தெரியும் ,ஆன்மீகப்பாதையில் உள்ளவர்கள் மேல் நம் மதிப்பீடுகளை சொல்ல வேண்டுமென்றால் ஆன்மீக ரீதியாக ம்ட்டுமே வைக்க வேண்டும் . விருப்பம் இல்லாமல் அவர் யாரையும் சாமியாரக்க முடியாது .

என் நண்பரின் வழியாக நித்யானந்த சுவாமிகளின் லெக்சர் கேட்டிருக்கிறேன் ,அவர் அருமையாக பல விசயங்களில் பேசியிருக்கிறார் .அவரும் சீரியசான சில தியான கோர்ஸ்கள் நடத்துகிறார்.என் நண்பரின் அனுபவம் நன்றாகவே இருந்ததாகவே சொன்னார்.சிறிய வயதில் அவர் பல விசயங்களைப் பற்றி நன்றாகவேப் பேசுகிறார்.ஆனாலும் என் பகுத்தறிவு மயக்கம் அவ்வுளவு எளிதாய் எல்லோரையும் நம்ப மறுக்கிறது .நித்யானந்தரிடம் நானும் எனர்ஜி தரிசனம் வாங்கி இருக்கிறேன் ,ஒரு மாதிர்யாக இருந்தது ,கொஞ்ச நேரம் போதையாக அவ்வுளவு தான் .விபாசனா தியானம் பண்ணிக் கொண்டு இருந்ததால் குழப்ப வேண்டாம் என்று இவரின் தியானத்திற்கு நான் செல்ல வில்லை .

அம்மா என்கின்ற அமிர்தானந்த மையி ,இவர்கள் போட்டோ எங்கள் வீட்டில் 90களின் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது ,என் தாத்தா பாட்டி இவர்களை கேரளாவில் சந்தித்து பக்தர்களாகி விட்டிருந்தனர். அப்போதல்லாம் நான் இவரை
அதிகமாய் கிண்டலடித்து கொண்டு ஆச்சியிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பேன். அதன் பிறகு அம்மா தமிழ் நாட்டிலும் பாப்புலர் ஆகி வந்ததை தொடர்ந்து கவனித்து வந்தாலும் அவ்வுளவாக அக்கறை காட்டவில்லை .எனக்கு அவரின் பகதர்கள் அம்மாவின் மேல் வைத்திர்க்கும் பக்தியை நான் அவ்வுளவாக ரசிக்க வில்லை ,அது ஆன்மீகம் அல்ல என்பது அப்போதைய நிலைப்பாடு .
அதன் பிறகு விபாசான சென்றிருந்த போது யோசிமெட்டியில் இருக்கும் ஒரு யோகா ஆசிரியர் (வெள்ளைக்காரர் தான்) அம்மாவைப் பற்றி புகழ்ந்த படி இருந்தார். அம்மாவைப் பார்க்க அவரும் அவர் நண்பர்களும் தொடர்ந்து 3 நாட்களாய் 200 மைல் வண்டி ஓட்டி வந்திருந்தார்களாம் . அப்படி அவர் சொன்ன போது அப்படி என்ன இருக்கிறது என்று தோண அந்த வருடம் அம்மா இங்கு வந்த போது போயிருந்தேன் . ஓ அது ஒரு பக்தி கல்டின் பெரும் கூட்டம் ,பெரும்பாலும் அமெரிக்கர்களை மட்டுமே நான் பார்த்தேன் ,இந்தியர்கள் குறைவு தான். கண்ணீரில பஜன் செய்யும் கூட்டத்தையும் ,அம்மாவை கட்டிப்பிடித்து பீறிடும் அழுகையை அடக்கி கொண்டு வரும் நபர்களைப் பார்க்கும் பொழுது எனக்குக் கொஞ்சம் பயமாய் தான் இருந்தது. அந்த பஜன் கூட்டத்தில் நாங்களும் சேர்ந்து இருந்த போது உணர்ச்சிகள் கொந்தளிப்பதை தாங்க முடியாமல் நான் எந்திருத்து வெளியே வந்து மற்றவர்களை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.பல கதைகள் பலர் என்கிருந்தோ வந்து 10 நாட்கள் அம்மாவைப் பார்க்கவே என்று வந்து அருகாமை ஹோட்டல்களில் தங்கி இருக்கிறார்கள் ,பலர் Mid west ,Canada இல் இருந்தும் சிலர் Europe இல் இருந்தும் வந்து தங்கிருந்ததைப் பார்த்து எதற்காக இப்படி என்று தோன்றியது ,இது ஒருவித கல்டோ என்ற தயக்கம் கூட இருந்தது ( என் புத்தி அப்படி ) .ஆனால் சிலரையும் அவர்கள் அம்மாவிம் மேல் வைத்திருந்த நம்ப்பிக்கையும் பார்த்த போது அவர்கள் வாழ்க்கையின் துவளும் சமயம் இந்த நம்பிக்கைகள் அவர்களை காப்பாற்றியதாக சொல்வதை கேட்ட போது ..கல்டாக இருந்தாலும் என்ன நல்லதே என்று தோன்றியது . அம்மா வந்திருக்கும் எல்லோரையும் அணைப்பார் வந்திருக்கும் எல்லோரையும் அது பலருக்கு வெடித்து கிளமபும் உணர்ச்சியின் அழுகைகளாக இருந்தது ஆச்சிரியம் . எனக்கு நிஜமாய் பயமாய் இருந்தது அழுது விடுவோமோ என்று .அப்படித் தான் இருந்தது எப்படியோ கட்டுப் படுத்திக் கொண்டு வந்துவிட்டேன் ( புத்தியின் சாரம் அப்படி ஆன்மீகமும் புத்தியும் நேரதிர் , நம்மைச் சரணடைய வைக்க முடியாத புத்தி )
இதை எழுதும் போது கூட அந்த நாளின் உணர்ச்சிகள் சிலிர்க்க வைக்கிறது.

சரணடைதல் என்ற உயரியத் தத்துவமே எல்லா பக்தி சார்ந்த மதங்களுக்கும் காரணம் ,இந்திய மதங்களின் பிரதானமே அது தான் . இராம கிருஷ்ண பரமகம்ஷரின் அடிப்படையே அது தான் . ஆனால் என்னைப் போன்றவர்கள் புத்தி அவ்வுளவு எளிதில் அதை செய்ய விடுவதில்லை . பெரும்பாலானோர் அப்படித் தான் , நான் கொஞ்சம் மோசம் ,என்னை விட மோசமானவர்களையும் பார்த்து இருக்கிறேன் , சூப்பர் ஈகோ உள்ளவர்கள் தேடுவது வேறொன்றை பக்தியை அல்ல .சரணடையத் தெரிந்தவர்களுக்கு எந்த மதமாயினும் பிரச்சினையில்லை இல்லாதவர்கள் தான் என் மதம் ,என் வழி ,என் குரு என்று சண்டை இட்டுக் கொண்டு இருப்போம் . எனக்கும் புரிந்தது நான் தேடுவது வேறு எதையோ என்று ,அல்லது சரணடைய இன்னமும் பக்குவப் படவில்லை என்று .

தேடலின் தேவையே நம்மப் பற்றிப் புரிந்து கொள்ளத் தான் ,என் மற்ற அனுபவங்களையும் பிடித்த படித்த ஆன்மீக குருக்களைப் பற்றி அடுத்தப் பதிவில் எழுதுகிறேன் .

Labels: ,