கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

கவித ?

சில கிறுக்குப் பிடித்த நாட்களில் கிறுக்கிய எழுத்துக்கள்,முன்னமே சொன்ன மாதிரி கவிதை மேல் எனக்கு காதல் உண்டு ,எனவே கவிதை என்று என் எழுத்தை சொல்லி கவிதையை கொச்சைப் படுத்த முனைவிதில்லை ..

ஏதோ சந்தர்ப்பத்தில் எழுதிய கவிதைகளுக்கு தலைப்பை இன்று தான் கொடுத்தேன் ,தலைப்பு சரியா அல்லது நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு தோதான தலைப்புகளை ..

கடைசி கிறுக்கலுக்கு தலைப்பு வைக்கக் கூட கற்பனை பஞ்சம் ..
உங்களுக்கு ?

எல்லா நாய்க்கும் ஒரு நாள்


திருடனைப் பார்த்து குரைத்தலில்
உயிரை இழக்க சாத்தியம்
வீட்டுக்காரனின் சொந்தத்தை குரைத்தலில்
அடிகிடைக்கும் சாத்தியம்
அவரின் பிள்ளைகளுக்கு ஒரு செல்லக் குரைத்தல்
அம்மாவுக்கோ ஒரு விசுவாச குரைத்தல்
மார்கழி மாசம் பருவக் குரைத்தல்
அதுவும் இப்போ இல்லை
ஆப்பிரேசன் பண்ணியாச்சு
உரத்துக் குரைத்தலே உயர்வு
பார்த்து குரைத்தலே வாழ்வு
எல்லா நாய்களுக்கும் ஒரு நாளுண்டு
அவர்களுக்கேயாய்
அன்று நான் குரைப்பேன்
எனக்குப் பிடித்த மாதிரி
எனக்கு மட்டுமேயான குரைத்தல்

------

புத்தியின் வார்த்தைகள்

எனக்கு உவப்பாயில்லை
ஏகாந்த வேளையில்
கனவுகளாய் நான் ஒரு
கவிதையை எழுதுகையில்
உன் வார்த்தைகளை
தத்துவங்களை எனக்கானக்
கவிதையில்
நீ
திணிப்பது
உவப்பாயில்லை எனக்கு



----
வீசப் படும் குண்டுகளின்
வெப்பத்தையும்
தாண்டி
உன்னை அணைத்த சூடு
இன்னமும் தெரிகிறது
உயிர் பிழைத்தலே பிரதானம்
இன்னொரு முறை உன் சூடு
கிடைப்பதற் காவது

Labels: , ,

இஸ்டாரு நானு

இந்த வாரம் நான் தாம்பா இஸ்டாரு ..இஸ்கூல்ல படிக்கிறப்ப இருந்து இப்படி ஒரு வாய்ப்பை நமக்கு எவனும் தந்ததில்லை ( ஏன்னா எல்லாருக்கும் என்னைப் பத்தி தெரியும் )

தமிழு மணம் நிருவாகிகளுக்கு டேங்க்ஸ் சொல்லுறது ஒரு மருவாதின்னு பப்ளிக்கெல்லாம் பீல் பண்ணதாலே இந்தப் பதிவு .

தேங்க்ஸ்ப்பா

நான் ஒண்ணும் பெரிதாய் பதிவுகள் போடுபவன் ஒன்றும் இல்லை, சமயம் கிடைக்கும் போது அப்ப அப்ப எதையாவது எழுதுவேன் .

படித்தலில் எனக்கான ஆர்வம் அதிகம் எழுதுவதை விட வாசித்தலே எனக்கு உவப்பாயிருக்கிறது. பிடிக்காத எழுத்துத்தாளர்கள் என்று ஒருவரும் இல்லை, அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எதிர்ப்பு ஒன்றும் இல்லை . இணயத்திலும் நிறையவே படிக்கிறேன் தமிழ் மணத்தில் சிலரது எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும் , சிலரின் கருத்துக்களின் மேல் எனக்குத் தீவிர விமர்சனங்கள் இருந்தாலும் அவர்களின் கருத்துக்களில் ஒத்துக்கொள்ளும் கருத்துக்கள் இருந்துள்ளதை பார்த்திருப்பதால் யாரும் ஸ்டீரியோ டைப் என்று முத்திரையிட்டு ஒதுக்குவதிலோ கொண்டாடுவதிலோ அர்த்தமில்லை ?

நம் தமிழ்மணத்தில் எனக்குப் பிடித்தவர் பலர். பின்னூட்டங்கள் அதிகம் இடுவதில்லை எனினும் படிக்கிறேன். நல்லப் பல ஆக்கங்களும்
சிந்தனைகளுக்கும் தளமாய் இருக்கும் பிளாக்கர் மற்றும் தமிழ்மணச் சேவை முக்கியமானதே.

செரி இன்னா எளுதி கிளிச்சிட்டேன்னு இஸ்டாராயிட்டேன்னு கேக்குற மனசாட்சிக்கு பயப்பட போறதில்லை..என்னா அதை தமிழ்மண நிர்வாகிக்கு பார்வேட் பண்னிட்டேன் ..

என்ன எழுதி படுத்தப் போறான்னு கேக்குறீங்களா ? எனக்கேத் தெரியாது

ஓரளவு எழுத முயற்சிக்கிறேன் ..உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள்

Labels: