கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

சாதியும் நாமும்

தமிழ் நாட்டில் எல்லா சாதி பற்றிய வாதங்களிலும் ஒரு ஒற்றை வார்த்தை கண்டிப்பாய்யிருக்கும் அது பாப்பான் ..சாதிப் பெயர் சொல்லித் திட்டுவது அநாகரியம் என்பதை பெரும்பான்மயோர் ஒத்துக் கொண்டாலும் பிராமணர்களை "பாப்பான்" என்றும் முஸ்லீம்களை துலுக்கன் என்று சொல்வதற்கு படித்தவர்கள் கூட கூச்சப் படுவதில்லை .நம் தமிழ் மணத்தில் கூட இது மாதிரி திட்டுவது அநாகரிகம் படித்தவர்கள் அறிவு ஜீவிகளாக தம்மைச் சொல்லிக்கொள்ளும் ஒருக் கூட்டத்தின் உள்முகம்.. நம் சாதிப் பிரிவினகளுக்கு பிராமணர்கள் மட்டுமா காரணம் ..மனு மீது பழி போட்டு கொண்டே எத்தனை நாட்களுக்கு இருப்பது ...மனுவைத் தூக்கி கடாசி விட்டு போய்க் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு சிலரை மட்டுமே குறை சொல்லிக் கொண்டு வந்தேறிகள் என்று சொல்லிக் கொண்டு இருப்பது நாம் நம்முடையக் குறைகளுக்கு அடுத்தவரைக் காரணம் சொல்வது போல் தான். பலருக்கு தன் சாதிப் புகழை சரித்திரத்தில் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.வெட்கமாயிருக்கிறது திண்ணயில் நடந்த சண்டையைப் பார்த்து . நாம் எல்லோரும் ஒருக் கேள்வியை நம்மை நோக்கிக் கேட்டுக் கொள்ள வேண்டும் ,நம்முடைய முன்னோர்கள் பணம் படைத்தவர்களாக இருப்பதற்கோ அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதற்கோ யாருடைய உழைப்பத் திருடாமல் இருந்திருப்பார்களா ..எல்லா ஆதிக்க சாதிகளும் கீழ்ச் சாதிகளை சுரண்டியவர்கள் தான் .சரண்டியவர்களின் சந்ததியர்கள் தான் குலப் பெருமைத் தேடித் திரிகின்றனர். பாப்பம்பட்டி /கீரிப்பட்டி யில் நடப்பதையும் கண்டதேவிப் பிரச்சினைக்கும் பிராமணர்களை குறை சொல்லித் தப்பிக்க முடியாது.. சமீபத்தில் பசும் பொன் ரிசர்வ்டு தொகுதியாக ஆக்கப்பட்டதுப் பற்றி மக்கள் கொந்தளித்ததாக ஜீவி வெளியிட்டது ..எங்கேப் போய் கொண்டு இருக்கிறோம் நாம் ..இதற்கெல்லாம் மனு மீது பழி போட்டுத் தப்பி போகாதீர்கள் .இதைப் பற்றி பதிவு போட வேண்டும் என எண்ணியிருந்தேன் ..தமிழ் மணத்தில் யாரும் பேசுவாரே இல்லை பிராமணர்க்ளுக்கும் அவர்கள் கொண்டுள்ள் சாதி அபிமானம் /வெறிக்கு நான் இங்கு வக்காலத்து வாங்கவில்லை ,நான் சொல்ல வருவது நம்மைப் போல் தான் அவாகளும் .சாதி பற்றிய பெருமிதம் இல்லாத எந்த so called உயர் சாதி என்று சொல்லுவோரும் ,பிற்படுத்தப் பட்ட சாதியினரும் இருப்பதாக என்க்குத் தெரியவில்லை.பிராமணர்களைத் திட்டுபவர்கள் தான் நம்மூரில் அதிகமாக இருக்க்கின்றனர் ஆனால் பிற சாதிப் பெருமைப் பேசுபவர்களை திட்டுவது என்பது குறைவு . பிராமணர்கள் இல்லாத கிராமங்கள் தான் இங்கு அதிகம் ..ஆனா எல்லா இடத்திலும் ஆதிக்க சாதிகளின் ஆட்டம் அதிகம் தான் .ஊர்களில்ப் போய்ப் பாருங்கள் அவர்கள் வாயில் புழங்கும் வார்த்தைகளை (அம்பட்டன் ,வண்ணான் ,சக்கிலியன் ..) சோபா சக்தி இலங்கையில் நடக்கும் வெள்ளாள சாதி வெறி பற்றி எழுதியும் பேசியும் வருகிறார் அவருக்கு நம்முடைய சாதி எதிர்பாளர்கள் எந்த வித ஆதரவையும் குடுப்பதாகத் தெரியவில்லை ,மாறாக அவர் குற்றம் சாட்டும் புலிகளுக்கு ஆதரவாகத் தான் நம் வீரமணிகளும் திருமாவளவனும் இருக்கிறார்கள். ஈழ்த்தில் பிராமண சாதி ஆதிக்கமேக் கிடையாது ,வெள்ளாள சாதி வெறிதான் அதிகம் ..நம் நண்பர்களுக்கு இதைப் பற்றித் தெரிந்தாலும் அமுக்கமாய்த் தான் இருப்பார்கள் . ஆக நம் சாதி உயர்ந்தது ,சாதி பற்றி எழுதலாம் பேசலாம் பாப்பன்களைத் திட்டலாம் ,முஸ்லீம் நண்பர் இல்லா விட்டால் துலுக்கப் பசங்க மத வெறிண்ணு சொல்லலாம் ஆனா நம்ம சாதி உயர்ந்த சாதி எங்களுக்கெல்லாம் சாதி வெறின்னல்லாம் கிடையாது ..எல்லாத்துக்கும் அரசியல் வாதி தான் காரணம் ன்னு சொல்லி ஜல்லி அடிக்காதீங்க ..நம்ம எல்லாரும் ஒரு வகையில் சாதி வெறியர்கள் தான் ..மொதல்ல அதை ஒத்துக் கோங்க பின்னாலப் பேசலாம் புடலங்கா மனுவைப் பத்தி தவறை ஒத்துக்கல்லையின்னா திருத்த முடியாது