கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

சதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா

சதாம் தூக்கிலபட்டது பற்றி அறிவிக்கப் பட்டவுடன் அவரைப் பற்றிய தொலைக்காட்சியில் தொடர்ந்து வரும் விவாதங்களையும் தொடர்ந்து பார்த்த போது தோன்றியவைப் பற்றிய ஒரு அவசரப் பதிவு .

தூக்கிலடப்பட்ட சதாம் ஒன்றும் புனிதர் இல்லை ,அவர் செய்த அரசியல் கொலைகள் கணக்கிலடங்காதது .அதற்கான தண்டனைதான் இது ,அது நியாயத்தின் தர்மத்தின் வெளிப்பாடு என்று எடுத்துக் கொள்ளலாமா ?

அப்படித்தான் அவரால் பாதிக்கப் பட்ட ஷியாக்கள் இராக்கில் சந்தோசாமாகக் கொண்டாடுகிறார்கள் .பாதிக்கப் பட்ட மக்களிடமிருந்து அப்படிப் பட்ட கொண்டாடங்களைத் தான் எதிர்பார்க்க முடியும் .

மாறாக ,யார் தான் கொல்லவில்லை ,புஷ் கூடத் தான் இராக்கில் கொல்கிறார் ,அவரும் தண்டிக்கப் படுகிறவரே ? என்று அவர் மேல் ஒரு தியாகிப் பட்டத்தையும் ,அமெரிக்காவை எதிர்த்ததாலே யே அவர் செய்த தவறுகளை மன்னிக்கத் தாயாராக இருக்கும் பார்வையும் உண்டு.

இந்த இரண்டு பார்வைகளும் தவறானவை என்றேப் படுகிறது .சதாம் ஒன்றும் புனிதர் அல்ல ,அவர் தண்டிக்கப் பட வேண்டியவரே ? தூக்குத் தண்டனை நாகரிக உலகில் தேவையில்லாதது என்ற கருத்தாக்கம் கொண்ட நான் அவர் தூக்குத் தண்டனையை ஆதரிக்க முடியவில்லை.

குர்திஷ் மக்களுக்கு அவர் பண்ணிய தூரோகம் மன்னிக்க முடியாதது தான் ,என்றாலும் இன்றைய சூழலில் அவர் கொல்லப் பட்டது பழிக்கு பழி வாங்கும் மோகமும் ,ஷியா /சுன்னி அரசியலும் தான் .

சதாம் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் எங்காவது அடைக்கலம் வாங்கி தப்பியிருக்கலாம் ,அவர் முட்டாளாகவும் ,மாறி வரும் உலகச் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமதுமே அவரின் முடிவுக்குக் காரணம் .ஜோசப் ஸ்டாலின் விசிறியும் ,அவரைப் போலவே ஆள முயற்சியும் செய்த சதாம் ஸ்டாலின் இந்தக் காலக்கட்டத்திற்கு ஒத்து வராதவர் என்பதை உணரவில்லை.

சோவியத் விழுந்தப் பின்னரும் உணராதது அவர் கண்ணை மறைத்த அதிகார வெறியும் அளவு கடந்த நம்ப்பிக்கையும் தான் .

அவர் ஆண்ட போது ஒடுக்கப் பட்ட ஷியாக்கள் இன்று அரசில் பலம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.இராக் பிரதம மந்திரி அலுவலகம் முழுக்க முழுக்க ஷியாக்களின் ஆதிக்கத்தில் தான் இருப்பதாக வந்த செய்திகள் வரும் நாடகளில் இராக்கில் இனக் கலவரங்களைத் தான் கொண்டு வரும். சுன்னிக்கள் பழிவாங்கவேப் படுவார்கள் . இராக் மக்களுக்கு விடிவு காலம் அருகில் இல்லை எனத் தான் படுகிறது.

மேலும் சதாம் மேல் நட்ந்த விசாரணை கேலிக் கூத்தாகத்தான் இருந்தது.சதாமுக்கு ஆஜரான வக்கீல்கள் கொல்லப் பட்டதும் ,நீதிபதிகள் மாற்றப் பட்டதும் ,நீதிபதிகளின் தனிப்பட்ட கோவங்களும் விசாரணையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குவது.நீதிபதிகள் கூட அமெரிக்கர்களிடம் தான் இரண்டு வாரம் crash கோர்ஸ் எடுத்துக் கொண்டார்களாம் .

சதாம் தூக்கிலப் பட்டதில் நேரடி சம்பந்தம் இல்லாதது போல் புஷ் விட்ட அறிக்கை இன்னுமொரு கேலிக் கூத்து.

மேலும் ஏன் இந்த அவசரம் என்றும் புரிய வில்லை ,2006க் குள் முடித்து விட வேண்டும் என எண்ணி இருப்பார்கள் போல.அதுவும் இன்று ஏதோ சுன்னி ஈத் திருவிழா என்றும் CNN இல் சொன்னார்கள்.அதில் எதாவது அரசியல் இருக்குமா என்றுத் தெரியவில்லை.

என்னுடையப் பார்வையில் சதாமே இன்னும் கொஞ்ச நாட்களில் இறந்திருப்பார் ,வயசு 69 ,எத்தனை நாள் தான் இன்னமும் இருப்பார்.அதுவும் 35 வருடங்கள் ராஜாவாக இருந்த்தவர் ,ஒரு சாதாரணச் சிறையில் சாதாரணக் கைதியாக அவரை நடத்தி இருந்து அவர் பலருக்கு மறுத்த உயிர் வாழ்வதற்கானக் கருணையை அவருக்கு அளித்து ,யாருமே இல்லாமல் பிள்ளைகளும் இறந்த ஒருவர் வாழுவதின் வலியை உணர்த்தியிருக்கலாம். அமெரிக்கப் போன்ற நாடு நினைத்திருந்தால் இதைப் பண்ணியிருக்க முடியும் .சதாமின் சாவு இப்படி ஒரு விடயமாய் உலக மக்களுக்கு அவர் மேல் ஒரு சாப்ட் கார்னரை உண்டாக்காமல் ஒரு சாதாரணமாய் இருந்திருக்கும்.அதுவே அவருக்குத் தேவையானத் தண்டனை .இப்போது கொடுத்தது உலகத்தின் பார்வையில் பழி வாங்கலாகவும் ,கண்டிக்கப் படுவதாகவும்த் தான் பார்க்கப் படும்.

வரும் காலங்களில் சுன்னிக்களும் ,ஷியாக்களும் அடித்துக் கொள்வது அதிகமாகலாம்.அமெரிக்கர்கள் சீக்கிரம் வெளியே வர வேண்டியதன் அவசியம் அமெரிக்க மக்களின் நவம்பர் தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிவதால் ,பிரச்சினைகள் அதிகமாகவே ஆகலாம்.ஈராக் ஒரே நாடாகவாகவே இருக்குமா என்பதே சந்தேகமாகவே இருக்கிறது.
இராக் மக்களுக்குத் தேவை இப்போது பொறுமையும் ,மறதியும் ,எதிர் காலத்தின் மேதான நம்ப்பிக்கையுமே.

Labels:

ஈசனுக்கு மறக்குமா அவள் தாட்சாயினி என்பது

கவிதைகளை என்னால் உரைநடை போல் தொடர்ச்சியாய் படிக்க முடிந்ததில்லை .பொதுவாய் கவிதைத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் தொடர்ச்சியாய் ஒரே பேசு பொருளைக் கொள்ளாம்ல் இருப்பதால் ஒரு கவிதையை முடித்து விட்டு அடுத்தப் பக்கம் வரும் போது முந்தைய கவிதையின் ஹாங் ஓவரிலேயே என் சிந்தனைகள் தறி கெட்டு ஓடிவிடும்.

கவிதை படிப்பதும் புரிந்து கொள்வதும் என்க்குச் சிரமமே .
பல நாள் வாசிப்பில் சில கவிதைகள் பிடிக்கும் புரியும் .கவிதை வாசிப்பு சிரமாவதற்கு காரணமே பேசு பொருள் பற்றிய கவனம் இல்லாததும் ,கவிஞர்களுக்கே உரிய நுண்ணிய உணர்வை புரிந்து கொள்ளாததுமே என் குறைக்குக் காரணம் .கவிஞரின் உணர்வை உணர்வதும் நல்ல வாசிப்பே ,அல்லது கவிதை நமக்கு சில தரிசனங்களை விட்டுச் செல்வது உயர்ந்த வாசிப்பு .ஜெயமோகனின் சொற்களில் எழுத்தாளர் எழுதிய போது உணர்ந்த "மன எழுச்சியை" வாசிப்பவனும் உணர முடிவது எழுத்தாளனின் வெற்றி .ஆனால் என்னைப் போன்ற அரைகுறைகளின் வாசிப்புன் குறைகளும் பெரும்பாலும் ஒரு எழுத்தாளனின் எழுத்தை புரிந்து கொள்ளாமல் போவதற்கான வாய்ப்பு அதிகம் .

அவ்வாறாக நான் அவ்வம்போது படித்து திரும்ப படித்த புத்தகம் கனிமொழியின் அகத்திணை .அவற்றில் சில என்னைக் கவர்ந்தாக இருந்தது அதைப் பற்றி எழுதத் தொடங்கிய இப்பதிவும் என் வாதிப்பின் நீளம் போல் அதுவும் காத்துக் கிடந்தது சில நாளாய்.

கனிமொழியின் கருவறை வாசனயையும் படித்து இருக்கிறேன் ,சில கவிதைகள் பிடித்து இருந்தன .கனிமொழி அரசியல் காரணங்களால் பரவலாய் அறியப் பட்டிருந்தாலும் அவரின் செயல் பாடுகள் அவரை ஒரு சுய சிந்தனை உள்ளவராக காட்டியிருக்கிறது ,இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவரின் கலைஞர் மகள் என்பது அவர் வைக்க வேண்டிய விமர்சனங்களை வைக்க முடியாமலேப் போகும்,அவரின் செயல்களும் சொற்களும் கூர்மையானக் காதுகளால் கவனிக்கப் படும் ,இவரின் சில அவதானிப்புகள் தந்தையை சங்கடப் படுத்தக் கூடும் என்பதால் அடக்கி வாசிக்கிறார் என நினைக்கிறேன் .

கனிமொழியின் கவிதை கலைஞரின் கவிதையில் இருந்து மாறுபட்டது ,கலைஞர் எழுதுவது கவிதையா என்பது பற்றி எனக்கு மாற்று கருத்துக்கள் உண்டு எனினும் அவர் எழுதிய சில ஆக்கங்களை ரசித்து இருக்கிறேன் ,அவர் இன்னமும் சங்ககாலத்தில் தான் இருக்கிறார் .சங்க காலப் பாடல்களை வசனக் கவிதையாக மாற்றுவது மட்டுமே நல்லக் கவிதை ஆகமுடியாது.அந்த விசயத்தில் மகளின் கவிதைகள் சமகால உணர்வுகளையும்,சிரமத்தையும் ,விமர்சனங்களையும் விட்டுச் செல்கிறது .அவர் யாரன்று அறியாமல் படித்தாலும் தாக்கத்தை உண்டாக்க வல்லது ,

அம்மா என்னும் கவிதையில்

..
நிற்காது ஓடிக்கொண்டு
அவ்வம்ப்போது நிறைய அன்ப் செலுத்தும்
என் அம்மாவைப் பற்றி
எந்தக் கதைகளும் சொல்லுவதே இல்லை

என்பது ஊடக அம்மாக்களுக்கும் நிஜங்களுக்கும் ஆன இடைவளியைச் சொல்லுகிறார் ,மொழி நடையும் அருமை

அடுத்து

....
பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் நேசத்த
ஏன் ஒளித்துவைத்திருந்தாய்
இத்தனைக் காலமாய் ?

இந்த கடைசி வரிகளே ஒரு அப்பா மகள் உறவுகளைச் சொல்லும் ,நீண்ட கவிதையில் இதுவேப் போதுமானது விசயத்தைச் சொல்ல .கவிதைக்கே உரிய சொல்லாடல் உரைநடையில் இதயே நான் சொல்ல வெண்டுமானல் இரண்டு பக்கம் எழத வேண்டும் (ஜெயமோகனுக்கு ஒரு நாவல் )

பாவ விமோசந்த்திற்கு
ராமனுக்குக் காத்திருக்காதே

அவன் சீதையின்
அக்னிப் பிரவேச ஆயத்தங்களில்
ஆழ்ந்திருக்கிறான்
சீசரின் மனைவி என்பதாலேயே
அவள் கறைகளின்
நிழல் கூடப் படியாதவளாய்
இருந்தாக வேண்டும்

இராவணன் கற்புக்கும்
இவளே பொறுப்பு


ஆம் அப்படித்தானே இருக்கிறோம் ஆண்கள் ,ராவணனாய் இருந்தாலும் சீதைகளைத்தானே தேடிக் கொண்டு இருக்கிறோம் .கள்ளக்காதல் கதைகளில் எத்தனை சீதைகளோ ?

...
என் உடையும் முகமும்
உங்கள் ஒப்புதலுக்காகக்
க்கத்திருக்கின்றன
..
என் பெயரென்ன
யாராவது
முடிவுசெய்து சொல்லுங்கள்
சில யுகங்களாய்க்
காத்திருக்கிறேன்

உடையும் நடையும் மாறுவாதினாலேயே நாம் கலாச்சாரம் நாசமாகிவிட்டதாய் கூச்சம் போடுகின்ற நாம் ,வேட்டியில் இருந்து வந்த கதையை நைசாய் மறந்து விடுவோம்

..
எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை

என்றக் கவிதையில் வைத்ததருக்கும் விமர்சனம் ஒரு விவாதமாய் மாறியிருக்க வேண்டும், நம் சமூகத்தில் ஒரு வெகுஜன விவாதமாய் நடப்பது ஆகாதக் காரியம்.அறிவு ஜீவிகள் சொல்வதில் யாருக்கும் அக்கறையில்லை அதனால் இன்னும் இருவது வருசம் போனாலும் இதே கவிதையை வேறு யாரோ எழுதுவர் :-(

புதியவளாய்ப் பிறந்தாள் பார்வதி
ஒற்றைக்காலில் ஓராயிரம் வருடம் தவமிருந்தால்
மறுபடியும் சிவபத்தினி

பாவம்
முக்காலும் உணர்ந்த
ஈசனுக்கு மறக்குமா
அவள் தாட்சாயினி
என்பது

எத்தனை பெண்கள் சிவபத்தினிக்ளாய் மாறி சுயம் அழித்தலை சுகம் காணும் சிவனுக்காய் அவன் பிள்ளைகளுக்காய் செய்கின்றனர் .அவளுக்கே அவள் தாட்சாயினி என்பது தெரியுமா என்பது சந்தேகமே !


அடுக்குமாடியில்
பிள்ளியார் கரைக்க இடமர்ருக்
க்டலுக்கு ஓடும்போது
பூதாகாரமாய் வாளேந்திய
பிள்ளையார்கள் பயமுறுத்துககறார்கள்
என் மகனை

யாதார்த்தம் ,அடுக்கு மாடி வாழ்வின் இழப்பையும் கூறி பிள்ளையார் சதுர்த்தி என்னும் கொண்டாட்டம் அரசியலாவாதையும் குத்தி செல்கிறார் .

வெளிறிய சடலங்களாய்ச்
சமைந்து வெறிக்கின்றன
அடுக்கு மாடி வீடுகள்

காற்றில் அலையும்
துணிகளையும்
எப்போதாவது கூச்சலிடும்
குழ்ந்தைகளையும் தவிர
சந்தடி ஏது ?

கிராமத்தில் வளர்ந்த என்னைப் போன்றோர்க்கு புரியும் அவஸ்தை .கவிமொழி என்பதே ஆராதிக்க கூடியதாகத் தான் இருக்கிறது. நிஜமாய் பொறாமையாய்க் கூட இருக்கிறது எப்படி இந்த கவிதைகளை எழழதுகிறார்கள் என்று .

சுஜாதாவுக்கு அர்பணித்திருக்கும் இந்தப் புத்தகத்திற்கு நஞ்சுண்டன் முகவுரை எழுதியிருக்கிறார் ,வழக்கம் போல் எனக்கும் அவர் அகத்திணை படிமம் பற்றிச் சொல்லியது எதுவும் எனக்குப் புரியவில்லை.

சுமை என்னும் தலைப்பில் எழுதியது தான் எனக்குப் பிடித்த ஆக்கம்

கதவு தட்டி அழைத்துவந்து
என்னை உட்கார வைத்தார்கள்
...
அணிந்திந்த நகைகளுக்காய்
என் குடும்பத்தை அழித்தவன்
போகிறப்போக்கில் என்னைப்
புணர்ந்தவன்

...

இதோ அவனது தலை
வெட்டுப் பாரையிலிருந்து உருள்கிறது
பார்வை என்மீது குத்திட்டு

கணக்குகளைச் சீர்செய்துவிட்டது அரசு

இனிச் சுமக்க வேண்டும்
இவன் கொலைகளோடு
இவன் மரணத்தை.

கொல்லப் படுபவனை பார்ப்பவரின் நுண்ணுணர்வை புரிந்து எழுதியிருக்கிறார். கொல்வதே தண்டனை எனப் புரிதல் கொண்டவர்களுக்கு மனித மனம் புரிவதேயில்லை, பெண் மனம் அப்படட ஒன்று இருக்கிறதா என்ன ?

Labels:

ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் பேட்டி ஆனந்த விகடனில் படித்த பொழுது எனக்கு அவர் மேல் இருந்த எனக்கு இருந்த மதிப்பை மறு சிந்தினைக்கு உள்ளாக்க வேண்டி வ்ந்தது .அதன் தாக்கம் தான் இந்தப் பதிவு.
ரவிசங்கர் வாழும் கலை அமைப்பு மூலம் செய்து வந்தப் செயல்களின் மேல் ஒரு மதிப்பு இருந்தது அவர் ஒரு கார்ப்பரேட் சாமியார் மேல் தோற்றம் அழித்தாலும் அவர் மேல் இருந்த ஒரு சில தீவிரமான விமர்சனங்களையும் நான் கண்டு கொண்டதில்லை .
அவரின் இந்தப் பேட்டியில் குறிப்பிட்ட சில விசயங்கள் அவசியமில்லாதவை .கலாசேத்திரா பொறுப்பாளர் அவங்க மாணவர்களை இவருடைய நிகழ்ச்சிக்கு அனுப்பாததும் அதற்கான அவர் சொன்னக் காரணம் சரியானதல்ல தான்.பரதம் இந்து மதத்தைக் சார்ந்தக் கலைதான் ,இன்னமும் பரதத்தில் இந்து மத கடவுள்களை நோக்கித்தான் அவர்களின் நாட்டியம் இருக்கிறது .அதனால் ஒரு இந்து மத விழாவில் கலந்து கொள்ள மறுப்பதாக சொன்னது முட்டாள்த் தனமாக இருக்கிறது .
ஆனால் இந்த விஷ்யத்தை ரவிசங்கர் ஆனந்த விகடன் போன்ற பத்திரிகையில் சொல்லியிருக்க வேண்டியதில்லை ,அதிலும் அவர் கிறிஸ்த்துவர் எனபதல்லாம் தேவையில்லாதது .
அதுவும் ரவிசங்கர் ஒரு இந்து சாமியாராக மேற்கு நாடுகளில் அடையாளம் காட்டிக் கொள்பவர் அல்ல.அவரின் வாழும் கலை அமைப்பு இந்து மத சாயல்களைக் கொண்டு இருந்தாலும் அவர்கள் சொல்லிக்குடுக்கும் பிராயண்மத்தயும் சுதர்சன் கிரியையும் ஒரு பயிற்சியாக சொல்லிக் கொடுப்பது போன்று தான் இருந்தது .அவரின் இந்த கோர்ஸ்களில் பல கிருத்துவ ,யூத ,இஸ்லாமியர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றிருக்கிறார்கள் .அது தான் எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது மேற்கில் ஒரு முகமும் இந்தியாவில் இந்து முகமுகவா இருக்கிறார் ?
பரதமும் ,பிராயாணமும் ,யோகாவும் இந்து மத அல்லது இந்தியத் தரிசனங்களின் வழியாக வந்தது தான் ஆனால் யோகா இன்று உலகம் முழுவதும் இந்து மதச் சாயலின்றி எல்லா மக்களாலும் பயிலப்படுகிறது .ஓரு நல்ல விசயம் எப்படியாவது பலர் பின்பற்றினால் நல்லது தானே .யோகா இந்தியாவுக்கும் இந்து மதம் மேலும் நல்ல மதிப்பைத் தந்துள்ளது ,நாம் நம்பும் விசயம் உலகத்திற்கு உதவும் என்றால் மற்ற மதத்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாமல் செய்ய முடியும் என்றால் மதத்தை தூக்கி குப்பையில் போடுவது தான் சரி. நல்லதைச் சொல்லவும் நல்லதைச் செய்யவும் மதம் தேவையில்லாதது.
அது தான் சரியான ஆன்மீக வாதியின் அடையாளம் ஆன்மீக வாதிகள் மதம் தாண்டி இருப்பது தான் சரி ,இவரும் அப்படிப் பட்டவராகத் தான் தெரிந்தார் .இல்லை என அதேப் பேட்டியில் சொல்லுகிறார் ,இந்து மதத்தில் தீவிரவாதம் வளர்வதுக்குக் காரணம் சிறுபான்மையோரின் இது மாதிரியான நடைவடிக்கைத் தான் என்கிறார் ..இது ஒரு அரசியல் தலைவருக்கானப் பேச்சு ..ஆன்மீகவாதிக்கானது அல்ல ...தொடர்ந்து மத மாற்றம் பற்றி சொல்லுகிறார் ,நாகலாந்தின் கிருத்துவத் தன்மையும் அவர்களின் தனிநாடுப் போரட்டத்தையும் மத மாற்றத்திற்கு முடிச்சுப் போடுகிறார் ..மதமாற்றம் நாட்டின் ஒருமைப் பாட்டிற்கு எதிரானது என்பதாகத் தான் அவரின் பேட்டி இருக்கிறது .காஷ்மீர் பிரச்சினைக் கூட அப்படிபட்டது போன்றுப் பதில் சொல்லியிருக்கிறார் ...பாலீஷான இந்துதுவப் பேட்டி..
இவர் அடிக்கடி வந்து அமெரிக்க மக்களை உய்விக்க நட்த்தும் கோர்ஸ்களுக்கு சதன் பாப்டிச்டுகள் இந்த மாதிரி எதிர்ப்பு கொடுத்தால் இவர் அப்ப என்ன சொல்லுவார்ன்னு தெரியல்ல ?
அமைதிக்கு வழி வாழ்வதற்கு வழி என்று சொல்லிக் குடுப்பவர்களுக்கே இந்த் மாதிரியான் சிந்தனையென்றால் எங்கப் போய் முட்டிக் கொள்வது ?

Labels: