கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

விபாசனா -ஒரு ஆத்ம தரிசனம்

புத்த மதம் பற்றி சில அறிவுகள் இருந்தாலும் ,புத்தரைப் பற்றி ஓஷோ எழுதிய தம்ம பத உரையை படித்த போது புத்தரைப் பற்றி படிக்கும் ஆர்வத்தில் பெளத்தம் பற்றி படிக்க ஆரம்ப்பித்தேன் . புத்தமதத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஒரு நல்ல அறம் சார்ந்த விசயம் (கொல்லாமை /பொய் சொல்லாமை / போதை பொருள் சாப்பிடாமை ..) இவைகளை எல்லா மதமும் தானே சொல்லுகிறது ,மேலும் அது தத்துவ ரீதியாக என்ன சொல்லுகிறது என்பதைத் தேடிக் கொண்டு இருந்த போது அருகாமையில் தைவானைச் சேர்ந்த புத்த மடாலயம் ஒன்றை சன்னிவேலில் திறந்தார்கள் அவர்கள் புத்தமதம் பற்றிய வகுப்பை கேள்விப்பட்டு நானும் சில நண்பர்களும் சென்றோம் .

புத்த பிக்குவாக அங்கு இருந்தவர் Cal tech இல் computer science இல் Doctrate வாங்கியவர் அதன் பின் புத்தமதத்தில் ஈடுபாடு கொண்டு மொனாஸ்டிரியில் சேர்ந்தவர் .அருமையான் பேச்சாளர் ,அவரிடம் இருந்து புத்த மத தியானத்தையும் புத்த மதம் பற்றிய சிறப்பான விளக்கங்களையும் கற்றுக் கொண்டோம் . 30 - 45 நிமிடம் வாரம் ஒருமுறைப் பண்ணும் தியானம் பிடித்திருந்தது ஆனால் வழக்கத்திற்கு வரவில்லை அதற்கு காரணம் என் சோம்பேறித்த்னம் தவிர வேறில்லை.

என் நண்பன் மூலமாக விபாசனா என்னும் புத்தர் கற்றுக் கொடுத்த தியான முறையை கோயங்கர் என்பவர் இந்தியாவில் கற்றுக் கொடுத்த்க் கொண்டு இருக்கிறார் எனவும் அவர்களின் செண்டர் ஒன்று கலிபோர்னியாவில் யோசிமிற்றி பக்கத்தில் இருப்பதாகவும் கேள்விப் பட்டு அவர்களின் web site ல் படித்து தெரிந்து கொண்டாலும் அதன் விதிமுறைகள் பாத்து கொஞ்சம் பயந்து போய் நம்மால் முடியுமா என்று எண்ணி தள்ளி போட்டுவிட்டேன் . கடைசியாக போன் வருசம் பெப்ரவ்ரியில் மனைவி ஊருக்குப் போயிருக்கும் போது துணிந்து போய் விட்டேன் .

சாண்டா கிளாராவில் இருந்து யோசிமிற்றிக்கு வழ்க்கமான பிரஸ்னோ வழிதான் போக எண்ணியிருந்த போது நண்பர் Ca-152 வழியாக back route ஒண்ணு சொன்னார் அதை குறித்துக் கொண்டு கிளம்பியப் பயணம் வெகு அருமை அந்த வருடம் பெய்த மழையினால் வழியெங்கும் பசுமை பெருசா டிராபிக்கும் இல்லாததால் மூன்று மணி நேரப் பயணம் இனிமையாகவே இருந்தது .

North Fork என்ற இடத்தில் இருக்கிறது வட கலிபோர்னியாவின் விபாசனா நிலையம் .போய் இறங்கிய உடன் ஒரு பாரம் எழுதி கையெழுத்துப் போட்டு விட்டு தங்கும் இடத்திற்கு வழி காட்டினார்கள் .அருமையான மலைப் பகுதியில் இருந்தது தியான நிலையமும் (அவங்க தம்மா ஹால்ன்னு சொல்லுவாங்க) அதைச் சுற்றி தங்கும் விடுதிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும்த் தனி தனியாக இருந்தது . எனக்கு டாரிமெண்டிரி ஸ்டையில் பெட் யும் அதில் துணி போட்ட மறைப்புடன் 15 பேர் தங்குவது மாதிரியான 2 Rest Room aka Bath room உள்ள ஒரு பெரிய ஹால் .நான் ஏற்கனவே லேட்டாக வந்ததால் குளித்து விட்டு 8 மணிக்கு தம்மா ஹாலுக்கு சென்று விட்டேன் அங்கு அவர்கள் ஒவ்வொருவராய் கூப்பிட்டு ஒரு இருக்கை கொடுத்தார்கள் ,கிட்டத்தட்ட 100 பேர் இருக்க கூடிய பெரிய ஹால் .ஆண்களும் பெண்களும் சரி பாதியாக இருந்தார்கள் .பெரும் பாலோனோர் வெள்ளைக்காரர்கள் ,சில இந்திய முகங்கள்.நான் சுத்தி முத்திப் பாத்தேன் மருந்துக்குக் கூட புத்தர் சிலையோ அடையாளங்களோ கிடையாது ..இன்னாடா தப்பா எதுக்காவது வந்துட்டமான்னுக் கூட யோசிச்சேன்

துணை ஆசிரியர் எனப்படுபவர் (அங்கு ஆசிருயர் ,துணை ஆசிரியர் தான் ..குரு எல்லாம் கிடையாது ) அந்த 10 நாள் வகுப்பைத் தொடங்குவதற்கு முன் விதி முறைகளை சொல்லி விட்டு ஒரு டிவிடி எடுத்து டிவியில் படம் போட்டார் .அதில் கோயங்கர் (அவர் ஆசிரியர்) என்னப் பண்ணப் போகிறோம் என்ன என்ன Scedule போன்றவற்றை சொல்லி விட்டு கோர்ஸ் தொடங்கினார் .அடுத்த நாள் காலை முதல் சீரியசான தியானங்கள் தொடங்குவதால் கொஞ்சம் நெர்வஸ்யாகத் தான் இருந்தது .இப்படியாக ஆரம்ப்பித்தது .

விதி முறைகளையும் / கால அட்டவணையும் பாருங்கள் http://www.dhamma.org/code.htm

ஐந்து precepts எடுத்துக் கொண்டு தான் வகுப்பு ஆரம்பிக்கும் ..இது புத்த மதத்தின் தலையானக் கோட்பாடு ..இது தான் அவை

1 . to abstain from killing any living creature;

-கொல்லாமை .அங்க தான் சாப்பாடு சைவம் தான் போடுறாங்க அதினால பிரச்சினை இல்ல .வேகன் ஆளுங்களுக்குக் கூட தனியா சாப்பாடு வ்வத்திருந்தங்க.
2. to abstain from stealing;

-திருடாமை .இது ஒரு பெரிய விசயமில்லை.
3. to abstain from all sexual activity

- செக்ஸ் வைத்துக் கொள்ளாமை அல்லது செலிபஸி
அதுவு ஒண்ணும் கஷ்டமில்லை
4. to abstain from telling lies;

- பொய் சொல்லாமை .இது கஷ்டம் அதுனால பேசக்கூடாதுன்னு ஒரு விதி இருக்கிறதுனால இதுவும் ஒகே.எப்படி பேசாம இருக்குதான்னு ரொம்ப யோசித்தேன் .
5. to abstain from all intoxicants.

-போதைப் பொருள் உட்கொள்ளாமை

There are three additional precepts which old students (that is, those who have completed a course with S.N. Goenka or one of his assistant teachers) are expected to follow during the course:

6. to abstain from eating after midday;
7. to abstain from sensual entertainment and bodily decoration;
8. to abstain from using high or luxurious beds.


இது பெருசுங்களுக்கு ..old student ன்னா ஒரு தடவை தாக்குப் பிடித்தவர்ன்னு அர்த்தம் .

முதல் நாள் 4 மணியில் இருந்து ஆரம்பித்த தியான வகுப்பு சாயங்காலம் 9 மணிக்கு படுக்க வரும் வரை தொடரும் .சாப்பாடுக்கு மட்டும் தான் ரெஸ்ட்.முதல் நாள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது .ஒரு இடத்தில் இருக்கிறதுக்கே கஸ்டமாகத் தான் இருந்தது. அதிலும் ஆனா பானா என்னும் மூச்சில் கவனம் கொள்ளும் தியானம் ரொம்ப கடினமாகவே இருந்தது .(இது இந்து மத முறைதான் ,இது சித்தார்த்த புத்த காலத்திற்கு முற்பட்டது அவர் குருக்களிடம் இருந்து கற்றுக் கொண்டது )

ஒரு வினாடிக்கு மேல் மனம் ஒரு இடத்தில் இல்லை . நமக்கு ஒரு கணட்ரோலே இல்லை , திரும்ப திரும்ப நம் மனம் சொன்னத கேக்காம அது பாட்டுக்கு இஷ்டத்துக்கு சுத்தி கொண்டு இருந்தது .அதே தியானம் தான் முதல் மூன்று நாட்களுக்கு .மூணாவது நாள் கொஞ்சம் பரவாயில்லை நன்றாகவே முன்னேறியிருந்தேன் ,ஆனாலும் கஷ்டமாத் தான் இருந்தது .

அப்புறம் புத்தரின் பிரத்தீயேக் விபாசனா தியானம் பற்றி சொல்லிக் கொடுத்தனர் ,அதுவே அடுத்த எல்ல நாடகளுக்கும் அதைப் பற்றி அதிகம் விவரிக்க எனக்குத் தெரியாது .படிப்பதால் பெரிய பிரயோசனம் இல்லை அனுபவம் மட்டுமே உதவும்.

என்னுடய அனுபவத்தில் இது என்க்கு அனுபவ பூர்வமாக நம் மனத்திற்கு உள்ள வீச்சுக்களையும் சில புரிதல்களையும் கொண்டு வந்தது . 10 நாள் முடிந்த உடன் சில நாள்களுக்கு ரொம்ப சந்தேசமாகவும் தெளிவான சிந்தனை ஓட்டமும் இருந்தது . என்னை அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியது ,அங்கு நீங்களும் உங்கள் மன்மும் நட்த்தும் போரட்டத்தில் என்னுடய அழுக்குகளை எனக்குத் தெரியாத அழுக்குகளை எடுத்து வீசி என்னைப் பற்றிய என் மதிப்பீடுகளை மாற்றியது .நான் என் மேல் வைத்திருந்த மதிப்பீட்களை கிழித்துப் போட்டு நாயடி பேயடி அடித்து நீயும் ஒரு அசிங்கம் தானடா பெரிய புழுத்தி மாதிரி அறம் ன்னெல்லாம் பேசி திரியாதே என்று போட்டுத்தாக்கி விட்டது .ஆறாம் நாள் ஒடி போயிரலாம என்னு கூட நினைத்தேன் அந்த அளவிற்கு படுத்தி விட்டது .தனிமையில் நம்மைப் பற்றி யோசிப்பது எவ்வுளவு பெரியக் கொடுமைன்னு தெரிஞ்சது .பல நல்ல அனுவங்களும் கிடைத்தது ,முக்கியமானது உடலின் பற்றிய மாயை ,நம்மால் இவ்வுளவு தான் முடியும் என்பது மனம் சொல்வது என்பதை அனுபவம் மூலமாகவே உணர்ந்தேன் .மனம் எவ்வுளவு விசயங்களை ஞாபகம் வைத்து உள்ளது ,சப் கான்சியஸ் மனம் நம் வாழ்க்கயை எவ்வுளவு தூரம் கட்டுப்படுத்துகிறது என்பதை பற்றியும் ஒரு நல்ல புரிதல் இருந்தது .

ஒரு அருமையான அனுபவம் .ஆனால் என்னுடய கெட்டப் பழக்கம் சீரியசா கற்றுக் கொண்டதை வீட்டில் பண்ணுவது கிடையாது என்பது தான் .

அதற்கு அப்புறமும் ஒரு தடவை என் மனைவியை கூட்டிக் கொண்டு போய் வந்து விட்டேன் .அந்த அனுபம் இன்னமும் அருமை ,வாழ்க்கையில் உங்களுக்காக உங்களுக்கு மட்டுமேயானத் தருணங்கள் அவை .நீங்களும் போய் பாருங்கள் அப்ப புரியும் நான் என்ன சொல்லுறேன்னு .


ps:இந்த அனுபவங்களைத் எழுத முயற்சி செய்து அப்படியே டிராப்ட் லயே சில மாதங்களாய் கிடந்தது.இன்னைக்கு அப்படியே போஸ்ட் பண்ணியிட்டேன் ,அதினால அவ்வுளவு கோர்வையாக இருக்காது .மன்னிக்கவும்.புத்தரைப் பற்றி எழுத முயற்சிக்கிறேன் .

Labels:

வாழ்க்கை நெறியா இந்து மதம்

வாழ்க்கை நெறியா இந்து மதம்
==========================
இந்து மதம் குறித்த விவாதங்களில் ஒரு சமயம் மாற்று மொழி நண்பர் ஒருவர் சொன்னது பிரபலமான சுப்ரீம் கோர்ட் வசனத்தை " இந்து மதம் ஒரு வாழ்க்கை நெறி (way of life) என்று சொன்னார் இதை பல இடங்களில் நானும் சொல்லியிருக்கிறேன் ,பல முறை பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் . ஆனால் இப்ப சொன்ன நண்பர் தீவிர இந்துவத்துவ வாதி எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் முஸ்லீம்களை இழுக்காமல் இருக்க மாட்டார் , நான் எப்பொழுதும் தீவிரமாக எதிர் வினையாற்றுவேன் .

என்னுடைய கேள்வி - அப்படின்னா என் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள முஸ்லீம் /கிருத்துவ நண்பர்களும் ஒரே மாதிரி தானே வாழ்கிறோம் அவங்களையும் இந்துன்னு சொல்லலாமா ?

பதில்: அப்படிச் சொல்ல முடியாது ,அவங்க எல்லாம் மாமிசம் / மாடு சாப்பிடுவார்கள் .

நான்: நானும் தான் சாப்பிடுவேன் ,நான் இந்துவா இல்லையா ?

பதில் : ஆனா அவங்கள்ளாம் மாமிசத்த சாமிக்கு படைபாங்க இந்துக்கள் பண்ண மாட்டாங்க

நான் : அப்படியா ..அப்ப மாமிசத்த சாமிக்கு படைக்கிற மக்கள் எல்லாம் இந்து இல்லையா ?

பதில் : அப்படின்னு வச்சிக்கலாம்

நான் : ஓ அப்படின்னா இந்தியா இந்துக்கள் அதிகமாக இருக்கும்ன்னு சொல்லுவது தப்பில்லையா ..எங்க ஊர்லேல்லாம் பழய காலத்தில் ஆடு /கோழி வெட்டுறப் பழக்கம் நிறைய இருந்தது அவங்கள்ளெல்லாம் இந்து இல்லைன்னா சொல்லுறீங்க

பதில்: ம்ம் அவங்க கணபதிக்கும் /கிருஷ்ணனுக்குமா படைக்கிறார்கள்

நான் : நீங்க சொல்வது கணபதியும் கிருஷ்ணனும் தான் இந்து தெய்வங்களா

பதில்: நாங்கள்ளாம் அவங்களதான் கும்புடுறோம் ,பெரும்பாலோனார் அப்படிதான் கும்பிடுறாங்க ..

இப்படியாக வாதம் தொடர்ந்து கொண்டிருந்ததில் வழக்கம் போல் எந்த முடிவும் இல்லாமல் பை பை சொல்லி எந்திருத்துப் போய் விட்டோம் ..

ஆனால் பொதுவாக நம்முடையே இந்த குழப்பம் இருப்பதைப் பார்க்க முடியும் . பொதுவாக இந்து என்பது வாழும் வழிமுறை என்று சொல்லுவது பொருந்துமா ?


அப்படி என்றால் இந்து மதம் வாழும் வழி என்பது ஒத்துக்கொள்ள முடியுமா .ஒரு உச்ச நீதி மன்ற நீதிபதி சொன்னதற்காக அதையே தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோமா ?

அப்படியே அவர் சொன்னது சரியானது என்றால் எந்த விதத்தில் வாழ்வது இந்துமத வாழ்க்கை ?

இந்துக்கள் என்ப்படுவோர் எல்லோரும் ஒரே மாதிரியாகவா வாழ்கிறார்கள் அவர்களின் பிறப்பு ,திருமண ,இறப்புச் சடங்குகள் ஒரே மாதிரியாகவா இருக்கிறது ? சனாதான தர்மம் தான் இந்து மதமா ?

சாதி என்பது மட்டுமே இந்து மதத்தின் தன்மையெனில் இந்திய கிருத்துவத்தையும் இந்து மத்தோடு சேர்த்துக் கொள்ளலாமா ?


இந்துக்கள் என்பது யார் என்பது சரியாக வரையறுப்பது கடினம் . இந்து மதம் எல்லாச் சமயங்களிலும் இருந்த கருத்துக்களை எடுத்துக் கொண்டதாகக் கூறுவார்கள் .பெளத்தமும் சமணத்திலிருந்து எடுத்துக் கொண்டதுதான் ஊன் உண்ணாமை என்பதற்கு வேதங்களில் இருக்கும் சாட்சிகளே அதிகம் .புததர் எதிர்த்ததே இந்துக்களின் சடங்குகளையும் பரிகாரங்களயும் அதைச் செய்யும் புரோகிதர்களையும் தான் .புத்தரை கொல்ல முயற்சித்தவர்கள் அனைவரும் அக்கால வேத வழிவந்தவர் களே . இந்து மதம் செய்து கொண்ட சமரசமே இந்து மதத்தை இவ்வளவு நாளும் இந்தியாவில் விட்டு வைத்து இருப்பதாகக் கொள்ளலாம் .புத்த மதம் இந்தியாவில் சமரசம் செய்து கொள்ளாததே புத்த மதம் இந்தியாவில் அழிந்ததற்கானக் காரணம் என்பது ஒஷோ வின் கூற்று.

ஒரு வகையில் சமணர்களும் ,பெளத்தர்களும் இந்து மதத்தின் ஆணி வேரை எதிர்த்து வந்த மதங்கள் தான் .சமணர்களிடமும் ,புத்தரிடமும் கடன் வாங்கியது தான் புலால் உண்ணாமை என்று சொல்கிறார்கள் .கொழ்சம் போல் இருக்கும் சமணர்கள் இன்று சமரசம் செய்து கொண்டு தீவிர இந்துத்துவ வாதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பது காலம் மதங்களின் மேல் செய்யும் விந்தைக்கு உதாரணம்.

இந்துக்கள் என்பவர்கள் பல தரப்பட்ட கலாச்சாரத்தில் தானே வாழ்கிறோம் ..
சைவ / வைணவ மதத்தின் இணைப்பு தான் இந்து மதம் என்று சொல்ல முடியாது ..சொடலை மாடன் /வண்டி மலச்சி அம்மன் / சாத்தா வழிபாடு / ஐய்யனார் போன்ற நாட்டார் வழிபாடு முறைகளயும் இந்து மதத்தின் கூறுகளாகத் தானேப் பார்க்கிறோம் அந்த் வகையில் கிருத்துவமும் /இஸ்லாமும் /பெளத்தமும் /சீக்கியமும் இந்து மத்த்தின் பிரிவு தான் என்று ஒத்துக்கொள்ள முடியுமா ? அவர்கள் (இந்து மதமல்லாதவர்கள்) இதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை ? முதலில் இந்துக்கள் ஒத்துக் கொள்ளுவார்களா ?

எல்லா இறையும் ஒன்றுதான் என்று கொள்பவர்கள் ஒத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு மதமமென்பது கிடையாது .

பெரும்பாலோனோர் மதம் என்பதே do & donts தான் .சைவன் நெற்றியில் திருநீறு /வைணவன் திருமண் /இஸ்லாமியர்களுக்கு ஹராம் / ஹலால் / கிருத்துவருக்கு ஞான்ஸ்தானம் போன்றவைகள் தான் அவர்களை மத ரீதியாக வைத்துள்ளது .

கிருத்துவர்களுக்கும் /முஸ்லீம்களுக்கும் அசைவம் உண்ணுவது பற்றி ஒரு தடையும் இல்லை .இந்துக்கள் மாமிசம் சாப்பிடுபவர்களாக இருந்தாலும் அவர்களில் பெரும்பான்மையோர் திருவிழா சமயங்களிலும் கோவில் செல்லும் போதும் உண்பதில்லை , மாட்டு மாமிசம் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை ?

இப்படி சிந்திக்கும் போது தோன்றுவது என்னவென்றால்

மதம் என்பதே எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதைச் சொல்வதும் எப்படி இறைவனை வணங்க வேண்டும் என்பதைத் தான் மதங்கள் சொல்லுவதாகப் படுகிறது அதற்கு ஒரு சட்டப் புத்தகம் போதாது ? சாப்பிடுவதும் எப்படி உடைகள் உடுத்துவதும் தான் மதமா என்ன ?

அப்படித் தான் மதமே உடைகள் உடுப்பதையும் எதைச் சாப்பிடுவதும் தான் மதமென்றால் எல்லா மதமுமே வாழும் வழிமுறை தான் .