கூத்துப்பட்டறை

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

மலையாளப் படத்தில் பிடித்தது -தொடர்ச்சி

போனப் பதிவில் காழ்ச்ச பற்றி எழுதுவதாய் சொல்லியிருந்தேன் , நண்பர் திருமலைராஜன் இட்டிருந்த பின்னூட்டம் மூலம் மரத்தடியில் அவர் காழ்ச்சப் பற்றிய பதிவை படித்தேன் .

http://www.maraththadi.com/article.asp?id=2777

இதைவிட நல்ல ஒரு விமர்சனத்தை என்னால் எழுதுவது கடினம் ,அதனால் அவர் பதிவை படித்து விட்டு என்னுடைய எண்ணங்களயை படியுங்கள்.

திரு கூறிய மாதிரி மசாலா படங்கள் எடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுடன் போட்டி போட முடியாமல் ,ஷகிலாப் படங்கள் மலையாளப் படங்களின் அடையாளங்களாய் ஆக ஆரம்பித்த சமயம் தான் காழ்ச்ச மாதிரியான தரமான படங்கள் வரத் துவங்கிருக்கிறது ,இது தொடரும் தொடர வேண்டும் என்பது என் நம்ப்பிக்கை.
காழ்ச்ச யில் எனக்குப் பிடித்தது மாதவனாய் வாழும் மம்மூட்டி , அந்த குஜராத்திப் பையனாய் வரும் சின்னப் பையன் பவன் மற்றும் குட்ட நாட்டு வாய்க்கால்களும் ,வள்ளமும் ..பார்க்கவே கொதியாப் போச்சு ..

ஆப்பரேட்டர் என அழைக்கப்படும் மாதவன் கேரக்டர் பார்த்து இருக்கிறீர்களா ,TV/VCR வரும் முன்னே கோவில் திருவிழாக்களில் எம்ஜியார் ,சிவாஜி படம் ,சில சமயம் சாமிப் படம் போட வரும் இந்த ஆசாமிகள் மறைந்து போய்விட்டனர் . காழ்ச்ச படம் பார்க்கும் போதுதான் அவர்களைப் பற்றிய நினைப்பே வந்தது. காலம் முறித்து போட்டு விடும் ஆத்மாக்கள் ..

மம்மூட்டி பவனைப் பார்த்துக் கொள்வதும் ,அவனுக்காக குஜராத் சென்று அவனை விட்டு வர மனம் இல்லாமல் கெஞ்சுவதும் படம் பார்க்கும் போது கண்ணீரை வர வழைப்பவை . மம்மூட்டி வாழ்ந்து இருப்பார் நடிப்பதாகவே இல்லை .படம் பாருங்க நாங்க என்ன சொல்லுறோம் என்று புரியும்.

மாதவன் மாதிரி நல்ல மனிதர்கள் வாழ்வில் உண்டு ,அவர்கள் தான் நம்முடைய கலாச்சாரத்தின் முதுகெலும்பாய் இருப்பவர்கள் .அவர்களின் எண்ணிக்கை குறையும் போது தான் நம் பாரத தேசத்தின் moral value யும் குறைகிறது .அன்பும் மனிதமும் மட்டுமே நம் கலாச்சாரத்தின் வேராக இருக்க வேண்டும்.நம் வரும் தலைமுறைகளுக்கு இந்த மாதிரி படங்களை காட்டுங்கள் ..மஜாவும் சிவகாசியும் தான் நம் கலாச்சாரம் என எண்ண வைத்து விடாதீர்கள்.

அப்புறம் ஆசிப் மீரானின் கதாவிசேசன் பத்திய பதிவு பார்த்தேன் ..சூப்பரா எழுதியிர்க்கிறார்.படிச்சுட்டு பின்னூட்டம் இடுங்க

http://asifmeeran.blogspot.com/2005/11/blog-post_29.html

Labels:

1 Comments:

At December 04, 2005 6:34 AM , Anonymous Anonymous said...

என் எண்ணங்களை கிறுக்கி உங்களையும் குழப்பவே கூத்தாடி என்ற நாமத்தோடு வந்திருக்கிறேன்.

அன்புள்ள கூத்தாடி,

நீங்களே உங்கள் வரவுக்கான காரணத்தை தெளிவாக அறிவித்துள்ளதால் எனக்கு அதிகம் குழப்பம் ஏற்படவில்லை என்பதை முதலிலேயே கூறிக் கொள்கிறேன்.

//உங்களின் இந்தப் பதிவு கயவர்களைக் கண்டிப்பதை காட்டிலும்//

பதிவையும் பின்னூட்டங்களையும் முழுமையாக படிக்கும் நடுநிலையாளர் யாரும் இக்கருத்தை சுய நினைவுடன் கூற மாட்டார்கள். ஓ! நீங்கள் தான் குழப்ப வந்தவர் ஆயிற்றே!. சரி நான் கண்டிப்பது இருக்கட்டும் ரவியிலிருந்து நீங்கள் வரை இச்சம்பவத்தை எந்தளவிற்கு கண்டித்தீர்கள் என்பதையும், இப்படிப்பட்ட தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் பார்க்காத கயவர்களை என்ன விதத்தில் தண்டிக்கலாம் என்பதையும் சற்று கூறுவீர்களா?

//சானியாவும் ,தஸ்லீனும் கற்பழிக்கப் பட்டால் குற்றமில்லை என்று சொல்லுகிறீர்களா//

நான் கூறாததை கூறுவதாக கூறி மற்றவரை "குழப்புபவரே", முதலில் கற்பு என்பதற்கு என்ன அர்த்தம் கொள்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். அவர்களை பொறுத்தவரை கற்பு என்ற வார்த்தையே கேலிக்குரியது. அப்படி ஒரு வார்த்தையே அவர்கள் அகராதியில் இல்லாத போது - அதாவது அவர்களிடம் இல்லாத ஒரு விஷயத்தை - எப்படி அழிக்க முடியும்?

//அவரே "மதம் மடுத்து" என்று இஸ்லாமை விட்டு விலகி விட்டு எழுதியிருக்கிறாரே படிக்க வில்லையா..//

எங்கே "எழுதியிருக்கிறார்" என்பதை காட்ட முடியுமா?

நீங்கள் உண்மையாளர் எனில் அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.

அதாவது கமலா தாஸ், "இஸ்லாத்தை விட்டு மாறியதையும்", அவரே "மதம் மடுத்து" என்று "எழுதியதையும்".

ஆதாரத்தைக் காட்டுவீர்கள் எனில், "மாத்ரு பூமி" மலையாள தினப் பத்திரிக்கை செய்த அனியாயத்தை கமலா தாஸ் பேட்டியின் ஆதாரச் செய்தியோடு ஒரு பதிவாகவே நான் வெளியிடுகிறேன்.

என்ன பொய்யான செய்திகளை ஆராயாமல் ஆதாரமாக கூறி "மற்றவரைக் குழப்பும்" கூத்தாடி அவர்களே "நான் ரெடி நீங்கள் ரெடியா?"

//உங்கள் மாதிரியான ஆள்காளால் தான் இஸ்லாமிற்கு கெட்டப் பேர்//

உங்கள் கரிசனத்திற்கு மிக்க நன்றி!

//உங்கள் பதிவு நேச குமாருக்கும் ,ரவி ஸ்ரீனிவாசுக்கும் மட்டும் என்றால் பின்னூட்டம் இட்டதற்கு மன்னிக்கவும் .
உங்களுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை//

இதைக் கூறுவதற்கு இவ்வளவு பொய்களைக் கூறி "மற்றவரை குழப்ப" வேண்டுமா? நேரடியாக ஒரே வார்த்தையில் கூறி இருக்க வேண்டியது தானே!

நண்பரே அவசியமில்லாத வார்த்தைகள் ஆரோக்கியமான சர்ச்சையிலிருந்து நம்மை வழி பிறழ வைக்கும். தவறான செய்திகளை இங்கு கண்டால் ஆதாரத்துடன் தாராளமாக கேள்வி எழுப்புங்கள். நட்போடு நாம் நல்ல முறையில் சர்ச்சை செய்வோம், தேவையில்லாத வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்து.

- நட்புடன் இறை நேசன்.

இலவச இணைப்பு:

சிண்டு முடிவதைத் தவிர வேறொன்றும் யாமறியேன் பராபரமே!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home